திரு என்னும் சொல் தென்சென்னை, வடசொல்லா?
55
கள்ளிக்கோட்டையென மேல்கரைத் துறைநகராகிய கோழிக்கோட்டிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதியான துணி ஆங்கிலத்தில் கலிக்கோ (Calico) என்றும் பின்பு அதன் வழியாய்த் தமிழில்
6
கலிக்கா என்றும் வங்காளத்தில் காளிக்கோட்டம் என்னும் நகர்ப் பெயர் ஆங்கிலத்தில் கல்குற்றா என்றும் பின்பு அதன் வழியாய்த் தமிழில் கல்கத்தா என்றும் வழங்குவதை நோக்குக. கோழிக்கோடு காளிக்கோட்டம் என்னுமிரண்டும் தனித்தமிழ்ச் சொற்களாகும். கள்>காளம்>காளி. கள்=கருப்பு. கோடிய மதில் கோட்டம். கோடுதல் கோணுதல் அல்லது வளைதல்.
கோழிக்கோடு > Calica > கலிக்கா.
>
காளிக்கோட்டம் > Calcutta > கல்கத்தா.
திரு என்பது ஸ்ரீ என்று திரியவே, திருமான் என்பதை ஸ்ரீமான் சீமான் என்றும் திருமாட்டி என்பதை ஸ்ரீமாட்டி சீமாட்டி என்றும் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். திருமான் என்பது திருமகன் என்பதன் மரூஉ.
ஒ.நோ : பெருமகன்>பெருமான். பெருமானுக்குப் பெண்பால் பெருமாட்டியாதல் போல, திருமானுக்குப் பெண்பால் திருமாட்டியாகும். ஸ்ரீ என்பது திரு என்பதன் திரிபேயாதலால், ஸ்ரீ அல்லது சீ என்னும் அடைமொழி பின்வருமாறு தனித்தமிழில் எழுதப்படும்.
வடமொழி வடிவம்.
தென்மொழி வடிவம்
ஸ்ரீ
திரு
மகா ராஜ ராஜ ஸ்ரீ
மா அரசு அரசத்திரு
ம ஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ
சீகாழி சீகாளத்தி
பேர் அரசு அரசத்திரு
திருவத்திரு
திருப்பெருந்திரு
திருக்காழி திருக்காளத்தி.
திருநாவுக்கரசு திருமங்கையாழ்வார் முதலிய பெயர்களில் வரும் திரு என்னும் அடை ஆங்கிலத்தில் அடியார் பெயர் முன் சேர்க்கப்படும். St. (Saint) என்பதற்குச் சமமாய்த் தூய்மை குறிப்பதாயிருப்பதால், அடியாரல்லாத பிற மக்களைக் குறிக்கும்போது திருவாளர் திருவாட்டியார் என்ற அடைகளையே முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் வழங்குவது தக்கதாகும். திருவாளன்மார் திருவாட்டிமார் என்பன பலர்பால் அடைகள்.
சீகாழியைச் சீர்காழியென்று வழங்குவது சரியாய்த் தோன்றவில்லை. சிறு தனம் என்பது ஸ்ரீ தனம் எனத் தவறாய் வழங்குகிறது.
இதுகாறுங்கூறியவற்றால், திரு என்பது தென்சொல்லே யென்றும் அதன்
திரிபே ஸ்ரீ யென்றும் தெரிந்துகொள்க.