உவமை தென்சொல்லே
73
என்று பொருள்படும் தூய தென் சொல். படியை இன்றும் மானம் என்பர்
வடார்க்காட்டார்.
ஆரியர் நாவாம்பொழிற்கு வருமுன்னரே. தமிழிலக்கணம் தென் மதுரையில் முழுவளர்ச்சியடைந்து விட்டதென்றும் தொல்காப்பியம் கி. மு. 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதேனும் அதில் கூறப்பட்டுள்ள இலக்கணம் (வடசொல் நீங்கலாகத்) தலைக்கழகக் காலத்தது என்றும் அதில் ஆளப்பெற்றுள்ள குறியீடுகள் எல்லாம் தென்சொல்லே என்றும் வடமொழி தென் மொழியினின்று கடன் கொண்டுள்ள சொற்கள் ஆயிரக் கணக்கினவாதலால், அவை வட மொழியிலுள்ள அளவானே அவற்றை ஆரியம் என மயங்கல் கூடாதென்றும் அறிதல் வேண்டும். சிலர் ஓரளவு வடமொழிகற்ற அளவானே தம்மை வடமொழி வல்லாரென்று பறை சாற்றிக் கொண்டு எள்ளளவும் ஆராய்ச்சியின்றி வடமொழியில் உள்ள சொற்களெல்லாம் வடசொல் என தாம் மயங்குவதோடமையாது மாணவரை யும் ஆசிரியரையும் அதிகாரிகளையும் மயக்கி வருகின்றனர். கல்வி வேறு ஆராய்ச்சி வேறு. சென்னையும் பெங்களூரும் போன்ற பன்மொழி வட்டாரங்களில் சில கூலிக் காரரும் பன்மொழி பேசுகின்றனர். அவரெல்லாம் மொழிநூலறிஞரோ!
தமிழைச் செவ்வையாய் அறிதற்கு தமிழர் தெற்கினின்று வடக்குப் போந்தார் என்னும் வரலாற்றுண்மையறிவு இன்றியமையாத அடிப்படை யாகும். இஃதில்லார் தமிழின் தொன்னிலை அறிதல் தென்மலை காணப் பொன்மலை செல்வதே யொக்கும்.
இது காறுங் கூறியவற்றால் 'உவமை' தென் சொல்லே யென்றும் அது உவ என்னும் முதனிலையடிப் பிறந்த தொழிற் பெயரென்றும் அதன் அடிவேர் உகரச் சொல் என்றும் அகன் கண்ணும் ஒத்தற் கருத்து கொண் டுள்ளதென்றும் அதனால் அது அதனின்று மோனை அள்ளை பின்னைத் திரிபாகத் தோன்றியுள்ள ஒத்தற் கருத்துச் சொற்களை யெல்லாம் தாங்கி நிற்கும் தனிப்பெரும் தூண் என்றும் அணிகட்கெல்லாந்தாயான உவமை யிலக்கணத்தையே அணியிலக்கணமாகவுங் கூறும் தொல்காப்பிய உவம இயல் வடமொழியில் பிற்காலத்து விரிவாகத் தோன்றிய அணிநூல்கட் கெல்லாம் மூலமென்றும் வரலாற்று அடிப்படையிலே சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் செய்தல் வேண்டுமென்றும் ஆராய்ச்சியின்றிக் குறடும் பேதையும் போலக் கொண்டது விடாமை ஆசிரியர்க் கழகன்றென்றும் அறிந்து கொள்க. தொல்காப்பிய இலக்கணத்தின் தொன்மையும் முன்மையும் தூய்மையும் தாய்மையும் ஆகிய எல்லா செய்திகளும் என் “தொல்காப்பியக் கட்டுரைகள்” என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.
உவமை தென் சொல்லே என்பதற்கு வேறு சில சான்றுகளுமுள.
தமிழில் “உவமை” என்னும் சொல்லில் “உவ” என்பது வினைப்பகுதி; 'மை' என்பது விகுதி; ஆகவே, 'உவ' என்பதே உயிர்நாடியான உறுப்பு.