86
மொழிநூற் கட்டுரைகள்
ழகரம் சில சொற்களில் ககரமாகத் திரியும்.
எ-டு : தொழுதி - தொகுதி. முழை - முகை.
இங்ஙனமே, நுழு, புழு, முழு முதலிய ழகர உயிர்மெய்யீற்றுச் சொற்களும் ககர வுயிர் மெய்யீற்றினவாய்த் திரிந்திருத்தல் வேண்டும்.
―
முள் முழு முகு, நுள் - நுழு - நுகு,
முள் - முளை. முளைத்தல் = தோன்றுதல்.
நுழுந்து – இளம்பாக்கு. நுழாய் = இளம்பாக்கு.
ஆயிரக்கணக்கான பழந் தென்சொற்கள் அழிந்து போயின்மையால், பல கருத்துகளை இணைக்கும் அண்டுகளை எல்லா மொழி முதல் அடிகட்கும் காட்டமுடிந்திலது.
(6) வடமொழியிற் பிற சொல்லிருத்தல் :
முகத்தைக் குறித்தற்கு ஆனனம், வதனம், முதலிய பிறசொற்கள் வடமொழியிலுள.
(7) தென்மொழியிற் பிற சொல்லின்மை :
தென்மொழியில் முகத்தைக் குறித்தற்குத் தொன்றுதொட்டு வழங்குவது முகம் என்னும் சொல் ஒன்றே.
(8) தென்சொல் வளம் :
இலை, தாள், தோகை, ஓலை என ஒரே, நிலைத்திணைச்சினையை நால்வகைப்படுத்தவும், வடு (மா), மூசு (பலா), கச்சல் (வாழை) என முக்கனிகட்கும் பிஞ்சுநிலையில் சிறப்புச்சொல் வழங்கவும் தெரிந்த மதிமான் பண்டைத் தமிழர்க்கு முகத்தைக் குறித்துச் சொல்லவில்லையென்பது, பகுத்தறிவுடையார்க்குக் கூறும் கூற்றன்று.
(9) வடமொழியில் தென்சொலுண்மை :
ஆயிரக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் வெளிப்படையாய் வழங்கிவருவதால் வடமொழியில் தென்சொல்லைக் கடன் கொள்ளாதென்னும் பித்தர் கூற்றை எள்ளியிகழ்க.
(10) மேலையாரியத்தில் முகம் என்னும் சொல்லின்மை :
மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலேனும் முகம் என்னும் சொல் லின்மையால், முகம் என்பது தென்பாலி முகத்துத் தோன்றிய தென் சொல்லே யென ஓங்கி அறைக.
"பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே”
"மெய்யுடை யொருவன் சொலகாட்டாமையாற் பொய் போலும்மே பொய்போ லும்மே."