40
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
படுதோல்வியால் இந்தியெதிர்ப்புக் கட்சி ஆட்சிக்கு வந்ததினாலும், ந்தி வெறியரும், நடுவணரசினரும் தமிழ்நாட்டு இந்தியாசிரியரும் இந்தி யென்னாமோவெனத் திகிலடைந்திருந்தனர். திரு. அண்ணா துரையார் இந்தியை நீக்க அந் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனாலும், பேராயம் ஆட்சியிழந்த சில பைதிரங் களிற் கூட்டுக் கட்சியாட்சி தோல்வியுற்றதினாலும், நடுவணரசியலார் சில மாதங்கட்குப்பின் அச்சந் தெளிந்து இந்தியைப் புகுத்த மீண்டும் திடங்கொண்டு விட்டனர்.
நடுவணரசு இந்தி புகுத்தத் துணிவூட்டிய நிலைமைகளாவன: (1) ஆங்கிலர்
இந்திய ஆட்சியை பேராயத்திடம் ஒப்படைத்தமை.
ஆரியச்சார்பான
(2) தென்னாட்டு நயன்மைக் கட்சிப் படுதோல்வி.
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
தமிழ்நாட்டுப் பேராயத் தமிழ்த் தலைவரின் அடிமைத் தனம்.
தமிழ்ப் பொதுமக்களுள் நூற்றுக்குத் தொண்ணூற் றுவர்
தற்குறிகளாயிருந்தமை.
முதல் இந்தியெதிர்ப்பு நின்றுவிட்டமை.
இந்திய அரசியலமைப்புக் காலத்தில் எதிர்க்காமை.
இந்தியை
எல்லாப் பள்ளிகளிலும் இந்தி புகுத்தப்பட்டமை. திரு.சி.சுப்பிரமணியனார் கல்வியமைச்சராயிருந்த காலத்தில், அவரது மும்மொழித் திட்டத்திற்குத் திரு. அண்ணாதுரையார் உடம்பட்டமை.
பேராய ஆட்சி இருபதாண்டு தொடர்ந்தமை.
(10) பேராயம் என்றும் தோற்காதென்னும் இறுமாப்பு. தென்னிந்திய இந்தி பரப்பற் கழகப் பணி மேன்மேலும் பெருகிவந்தமை.
(11)
(12)
(13)
(14)
ந்திய இந்தித் திரைப்படங்களுட் பெரும்பாலன தமிழ்நாட்டில் உருவாதல்.
சென்னைப் பல்கலைகழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்தாமை.
1967-ல் திரு. அண்ணாதுரையார் ஆட்சியேற்றவுடன் இந்தியை நீக்காமையும் மும்மொழித் திட்டத்தை யேற்கப் பிற பைதிரங்களையும் தூண்டியமையும்.