30
ஒப்பியன் மொழிநூல்
சுத்தம், மிராசுதார் முதலிய சொற்களுக்குத் துப்புரவு, பண்ணையார் முதலிய
வழங்குகின்றன.
தனித்தமிழ்ச்
(4) சொற்கள் உண்மை வடிவில் வழங்கல்.
கா: இராமம்-(நாமம்).
சொற்கள்
(5) அயல்நாட்டினின்று வந்த பொருள்கட்குத் தமிழ்ப்பெயர் வழங்கல்.
கா : bicycle மிதிவண்டி.
(6) வடபாகத்திலில்லாத பல பயிர்கள் செய்யப்படல்.
கா : காடைக்கண்ணி, சாமை, குதிரைவாலி.
(7) ஓவியவுணர்ச்சி சிறந்திருத்தல்.
(8) சல்லிக்கட்டு, சிலம்பம் முதலிய மறவிளையாட்டுகள் சிறப்பாய் வழங்கல்.
(ii) திருச்சிராப்பள்ளி யெல்லையிற் சொற்கள் குறைதல். கா : பரசு (sweep) என்ற சொல் வழங்காமை.
(iii)
வடார்க்காட்டு அல்லது சென்னைத்தமிழ் கொச்சை
மிகல்.
பரசு (பீராய்) மூஞ்செலி ( மூஞ்சூறு).
(iv) சென்னைக்கு வடக்கில் மொழிபெயர்தல்.
66 வடவேங்கடம் என்று, வேங்கடம்
தமிழ்நாட்டின்
வடவெல்லையாகத் தொல்காப்பியப் பாயிரத்திற் கூறப்பட்டுள்ளது. ஆயினும், "தமிழ்கூறும் நல்லுலகத்து" என்றதனால், அதைச் செந்தமிழ் நாட்டின் வடவெல்லையாகக் கொள்வதே பொருத்தமாகும்.
வேங்கடம் இப்போது தெலுங்க நாட்டிற்கு உட்பட்டு விட்டது.
தெலுங்கு மிகுதியும் ஆரியத்தன்மையடைந்து, ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளது.
தெலுங்கில் எழுத்தொலிகள் வடமொழியிற்போல் வல்லோசை பெறுகின்றன; வகரம் பகரமாகவும் ழகரம் டகரமாகவும் மாறுகின்றன;