உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

173


ஊரிடத்தே உள்ளதாகிய மாமரத்திலிருக்கும். முட்போன்ற பற்களையுடைய வாவலானது, உயரமான அழகிய ஒரு கிளையினிடத்தே தொங்கியபடி துயில் கொண்ட பொழுதிலே. போர் வெல்லும் சோழர்க்கு உரித்தான அழகிய பெரிதான காட்டினிடத்தேயுள்ள நெல்லியது இனிய புளிச்சுவையினைத் தான் நுகருவதாகக் கனாக்கண்டாற்போன்று, எனக்கு இனிதாயிருந்த அந்தக் கனவின்பமும் சுண் விழித்ததும் நீங்கிப் போயிற்றே!

கருத்து : 'கனவிற் பெற்ற அந்த மகிழ்வையும் விழிப்பில் யான் இழந்திருக்கிறேன்' என்பதாம்.

சொற்பொருள் : மா – மாமரம். வாவல் – வௌவால், ஓங்கல் அஞ்சினை – உயரமான அழகிய கிளை. தூங்குதுயில் – தொங்கிக் கிடந்து துயிலுதல். அழிசி – ஆர்க்காட்டுத் தலைவன். இப்பி – சிப்பி.

விளக்கம் : துறையிடத்தே மேயும் இப்பியினது ஈரிய புறத்தைப் புன்னையின் பூந்தாது உதிர்ந்து அழகுபடுத்தினாற்போல, அவரைப்பற்றிய கனவு நம்மையும் அழகு படுத்தலாயிற்று' என்றனள். 'அதுவும் கழிந்தது' விழித்து பொழுதிற் கனவு மறைதவால். மாங்கிளையிலே தொங்கியபடி தூங்கும் வௌவால், நெடுந்தொலைவிலுள்ள ஆர்க்காட்டுக் காட்டினிடத்துப் புளிப்பான நெல்லிக் கனியை அருந்தினதாகக் கனவு கண்டாற்போலத் தலைவியும் தொலைநாட்டிலுள்ள தலைவனோடு இன்புற்றுக் களித்தாற் போலக் கனாக் கண்டனள் என்க. 'அது கழிந்தன்றே' என்றது, 'அந்தக் கனவு தானும் இல்லாது போயிற்று' என்று கூறிப் புலம்பியதாம். வரை பொருட் பிரிவிடத்துத் தலைவியர் இப்படிக் கனாக் காணுதல் குறுந்தொகைச் செய்யுளினும் கூறப்பட்டுள்ளது (குறுந். 30). 'பொய்வலாளன் மெய்புறன் மரீஇய, வாய்த்த கைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்து, அமளி தைவந் தனனே' என வருதல் காண்க.

உள்ளுறை : 'துறை மேய் இப்பியது ஈர்ம் புறத்தே புன்னையின் பூந்துகள் வீழ்ந்து அழகுறுத்திய எதிர்பாரா இன்ப நிகழ்ச்சியைப் போன்று, தலைவன், எதிர்பாரா வகையிலே மீண்டுவந்து தன்னைத் தழுவித் தன் துயரத்தை மாற்றானோ?' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/174&oldid=1681607" இலிருந்து மீள்விக்கப்பட்டது