உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

213


யானை புனத்தை அடையக் காணும் குறவர் அதனை அழிக்கும் கருத்துடன் புறப்படுதலைக் கூறினாள், அத்தகைய நாடனாயிருந்தும் தலைவியின் நலனைத்தானே அழித்தற்குக் காரணமாயினதுடன். அதனை நீக்குதற்குத் துணியாமையும் எடுத்துக் காட்டுதற்கு. 'முகை' என்றது, முல்லைமுகையினை. 'சுடர்புரை திருநுதல்' பிறையொத்த அழகிய நுதலும் ஆம். 'யாங்கு விட்டனை? என்றது, விடாதேயிருக்கும் காலத்தும் நெற்றியிற் பசலை படர்ந்ததெனின் விடின் என்னாகுமோ என்று கவலையுற்றதைக் காட்டியதாம். 'பழகிய பகையும் பிரிவு இன்னாதே' என்பது, அங்ஙனமாயின் இயல்பாகப் பழகிய நட்பிடத்துப் பிரிவு எத்துணைக் கொடியதாகும் என்று கூறுவாளாகப் பழமொழியை நயம்படக் குறிப்பிடுகின்றனள்.

உள்ளுறை : துணையின் தீர்ந்த கருங்கண் யானையானது ஏனலை அணைந்தாற்போலத், தலைவனும் தன் சுற்றத்தினின்றும் நீங்கினனாகி வந்து தலைவியைத் தழுவினான் என்க. யானையை அழிக்கக் கருதிக் குறக்குடியினர் புறப்படுமாறு போலத், தலைவியின் நலனைக் களவாக கவர்ந்த தலைவனையும் அவர் அறியின் அழித்தற்கு முனைவர் என்பதுமாம்.

109. கழியும் பொழுது!

பாடியவர் : மீளிப் பெரும்பதுமனார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாய தலைமகளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

[(து–வி.) பிரிவுக் காலத்தினிடையே தலைமகளது துன்ப நிலையினைக் கண்டு கலங்கிய தோழிக்கு, அத் தலைமகள் தன்னுடைய இடர்மிகுந்த நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

'ஒன்றுதும்' என்ற தொன்றுபடு நட்பின்
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று
'அன்ன வோஇந் நன்னுதல்?' நிலை என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென 5
இரைக்கும் வாடை இருள்கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/214&oldid=1688299" இலிருந்து மீள்விக்கப்பட்டது