உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னிசைப் பாமாலை

41


பொய்யாத நும்மடியார்
புண்ணியமே செய்துசெய்துங்
கொய்யாத தாண்மலர்க்கே
கூர்ந்துநின்றா ரையோதான்
செய்யாத தீவினையே
செய்துசெய்து தீநெறிக்கண்
கையாத வாறுழன்றேன்
கல்வத்து நாயகமே!


படுகளவும் பொய்புலையும்
பாழ்ம்பழியுங் கோள்கொலையும்
நெடுகளவும் பற்றிநின்ற
நீசர்பெறா நின்மலர்த்தாள்
முடுகளவும் பார்த்திருந்து
முடனெனை யுட்கனிந்து
கடுகளவும் காக்ககிலீர்
கல்வத்து நாயகமே !


வஞ்சமலர் நெஞ்சமொடு
வல்வழக்கும் பொய்யுரை
விஞ்சமலர் வாய்கொண்டு
விண்டுரைத்தேன் வெய்
குஞ்சமலர் நுங்குடைக்கீழ்
கூர்ந்திருந்து நேர்ந்தப;
கஞ்சமலர் கொள்வேனோ
கல்வத்து நாயகமே !