உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. பரிகலப் படலம்

ஐவரை மணந்தெம் கணவர் அடைந்த
துயரெலாம் இங்கே சொல்லி முடியுமோ!
இவரில் ஒருத்தியாய் எளியேன் அடைந்த
குறையெலாம் இங்கே கூறி முடியுமோ!
ஒருநாள்— 5
வெட்கம், வெட்கம், மிகவும் வெட்கம்!
துக்கம் துக்கம் பெரிதும் துக்கம்!
மனமும் நாணி வருந்துதே அம்மா!
நாவும் குழறி நடுங்குதே அம்மா!
எப்படிச் சொல்வேன்! யாவற் றிற்கும் 10
என் தலை விதியை யன்றிவ் வுலகில்
எவரை நோக இடமுண் டம்மா!—
தீபாவளியோ திருக்காத் திகையோ,
நன்றாய் எனக்கு ஞாபக மில்லை;
வீட்டில் ஏதோ விசேஷ முண்டு; 15
வீரவ நல்லுர்[1] விருந்து முண்டு;
பருப்பு முதலிய பற்பல கறிகள்
வகைவகை யாக வைத்தது முண்டு.


  1. 16. வீரவ நல்லூர் - நாஞ்சில் நாட்டின் வடபகுதியிலுள்ள ஒரு சிற்றூர்.