பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்
37
ஆகிய ஐவகை ஒளிப்பிழம்புகள் ஒருங்கிணைந்தால் தோன்றும் ஒளிபோல இவனது பொலிவும் புகழும் விளங்கின[1]. இவனது புகழ் திருமாலின் புகழ்போலப் பரவியிருந்தது[2]. இவனது ஆட்சிக்குக்கீழ் இருந்த நாடுகள் வளமுடனும், இவனைத் எதிர்த்த நாடுகளின் வளமை பாழடைந்தும் காணப்பட்டன[3].
இசை வேட்கை
இவனது தந்தை உதியஞ்சேரல் இன்னிசை முழக்குடன் மகிழ்வாக வாழ்ந்தவன்[4]. இவனும் மகிழ்ச்சியால் முழக்கும் முரசொலியைக் கேட்டுத் தன்னையே பரிசிலாகக் கொடுத்தான்[5] இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இசையின்மீது இருந்த ஈடுபாடு நன்கு விளங்கும்.
பெற்றோர்
இவனது முன்னோர்கள் நாவலந் தண்பொழில் முழுவதும் ஆட்சிபுரிந்து புகழுடன் விளங்கினர்[6]. இவனது தந்தை அந்து வஞ்சேரலாகும்; தாயார் நல்லினி ஆகும்.
மனைவியின் மாண்புகள்
இவனது மனைவி சிறந்த அழகியாவாள்[7]. அடக்கமான தோற்றப் பொலிவினை உடையவள்[8]. பெரிய சான்றாண்மைப் பண்புகள் அவளிடம் அமையப் பெற்றன; நாணம் மிக்கவள்;[9] கணவனிடம் ஊடல் கொள்ளாத ஆறிய கற்பினை உடையவளாக விளங்கினாள். கணவனொடு ஊடிய காலத்தும் இனிய சொற்களையே கூறுவாள்[10]. அவளே வேளாவிக் கோமான் பதுமன் மகளாவாள்[11]. இவன் பெற்ற பிள்ளைகள் 4, 6 ஆம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர்.
'சோழன் மணக்கிள்ளி'யின் மகள் நற்சோணை என்னும் பெயருடைய மற்றொரு பெண்ணை இவன் மணந்தான்[12]. இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இருவர். மூத்தவன் பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தின் தலைவன். இளையவன் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள்.