உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

170 இரத்தக் கண்ணீர் விபசாரப் பதுமைகளாக நினைத்துவிட்ட பேயர் களின் பிரதிநிதியே ! ஏன் நிற்கிறாய்? ஏன் தயக்கம்? இதோ நான் தயார் ! என் பிணம் பேசுகிறது உன் னோடு! என் சவம் அழைக்கிறது உன்னை சல்லாபத் திற்கு! வா வா வஞ்சகனே ! வா ! இதோ நான்! முத்தாயி! முத்தனின் காதலி! உனக்கு வெள்ளாட்டி! இந்தக் கனல் கிளம்பும் ஓலத்தைக்கேட்ட சுகதேவன் பிரக்ஞையிழக்கிறான். சுகதேவ்: முத்தாயி! என்னை மன்னித்துவிடு! என்னை மன்னித்துவிடு! சுக முத்தாயி ஸ்தம்பித்து நிற்கிறாள். அவளுக்கு எதிரே ஒரு துரும்புபோல் துடிக்கிறான் தேவன். சுகதேவ்: அன்புள்ள சகோதரி ! இப்போதே முயற்சி எடுக்கிறேன். உன் காதலன் முத்தன் குற்றவாளி யல்ல எதிர் நாட்டு உளவாளியல்ல நிரூபிக்கிறேன். -e என்பதை இதைச் சொல்லிவிட்டு, சுகதேவன் அந்த இடத்தைவிட்டு வெளியே ஓடுகிறான்.