சுருளிமலை 141 மூலம் அவருக்களித்த இன்னொரு உறுதியைக் காற்றிலே பறக்க விட்டுவிடுவேன் அப்படி பறக்கவிட்ட பிறகு எனக்கேன் வாழ்க்கை? நானும் என் மைனாவுடன் போய்விடுவேன்!" அப்படியென்ன தந்தையிடம் உறுதி அளித்திருக்கிறாய்?” கரகமாடிக் கண்ணனின் அப்பன்-அது தவறினால் அவன் மகனாகிய இந்தக் கண்ணன் - இருவரில் ஒருவரைக் கரும்புள்ளி செம புள்ளி குத்திக் கழுதையில் ஏற்றி ஊர்வலம் விடவேண்டும் என்பதே அந்த உறுதி! அவன் அப்பன் தப்பித்துக்கொண்டான் -மகனுக்காவது அந்த விழாவை நடத்தலாம் என்று வெகு நாளாக நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் குள்ளேதான் இப்படி வந்துவிட்டது!” அதற் "ஏ அப்பா - எவ்வளவு பயரங்கரமான சபதம் ! ஏன் இப்படி யொரு உறுதியெடுக்கவேண்டும்? அப்படி என்ன அவர்கள் குற்றம் செய்துவிட்டார்கள் ?”
- அய்யோ - அந்தக் குற்றத்தைச் சொல்வதற்கே நாக்கு
கூசுகிறது. தயவுசெய்து என்னைக்கேட்டுத் தொந்திரவு பண்ணவேண்டாம்!" அறவாழிக்கு ஆவல் அடங்கவில்லை. எடுத்துக்கொண்டிருக் கிறசபதமோ பயங்கரமாயிருக்கிறது; பழிவாங்கவேண்டுமென்ற உணர்ச்சியோ கொந்தளித்துக் கிளம்புகிறது; அதற்கான காரணத்தைமட்டும் புரிந்துகொள்ளாமல் போய்விடமுடியுமா என்ன? தானோ அதிகமாக அறிமுகமாகாதவன். மேலும் வற்புறுத்திக்கேட்கவும் சிறிது பயமாக இருந்தது இருந்தாலும் உடனே தளர்ந்துவிடாமல், "நான் உனக்குப் பழக்கப்பட்டவன் அல்ல; என்றாலும் ஏதோ ஒரு உணர்வு, உன்பால் இழுத்து விட்டது. உன்கதையைக் கேட்கவேண்டும் போலிருக்கிறது. உன்கண்ணீருக்குக் காரணம் அறியவேண்டும்போல் உள்ளம் துடிக்கிறது. உன்சபதத்தை நினைத்தாலே நடுக்கம் பிறக்கிறது? ஆனால் சபதம்எழுந்த விதத்தைமட்டும்கூற மறுக்கிறாய்! இது நியாயமல்ல என்னை நீ நம்பலாம் தயவுசெய்து சொல்லு- எவ்வளவு பெரிய ரகசியமாக இருந்தாலும் அதைக் காப்பாற்று - -