உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நடந்து - அந்த வழியிலே நமக்குக் கிடைக்கின்ற நலன்களை அனுபவித்து - " திருக்குறள் ஒரு இன்பச் சோலை," அதை இதுவரை பாலையென எண்ணிக் கிடந்தோம், சோலைக்குச் செல்லுவோம். அதிலே கருத்துக் கான மயில் ஆடும்; கொள்கைக் குயில் கூவும்; நல்ல விளக்கங்கள் என்ற புள்ளிமான்கள் துள்ளும்; அத்தகைய சோலையிலே ஆனந்தத் தென்றலாம் அரசியல் தென்றல் வீசும் ! அத்தகைய அரசியல் தென்றலாக இலக்கியப் பெட்டகமாக க - - இன்பப் புதையலாக இல்லறக் கருவூலமாகக் கிடைத் திருக்கிற ஓவியம் தான் குறளோவியம் ! அவ்வழி நடந்து நாடு வளர்ப்போம் ! நலன் குவிப்போம் ! குளித்தலை இலக்கிய மாணவர் மன்றம் 16-4-57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/52&oldid=1703239" இலிருந்து மீள்விக்கப்பட்டது