உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கிற ஆராய்ச்சியிலே, ஈடுபடுவதற்குக்கூட நேரமில்லா மல், தங்கம் கலந்திருக்கின்ற அந்தப் பாறைகளை எடுத்துவந்து பிறகு அதை உருக்கி ஒன்றாக்கி, அதில் இருந்து எடுக்கின்ற தங்கத்தைப் போன்றது-இந்த திராவிடம் பெற்றிருக்கின்ற பதினைந்து. ஆறுகடந்து—அதைத் தொடர்ந்து சேறுகடந்து -ஊறு பல கடந்து-தோட்டத்திலே புகுந்து, முள் நிரம்பிய செடியிலே இருக்கின்ற ரோஜாவை அழ கான குமரியுடைய கரங்கள் பறிக்கிறதே; முள்ளுக் கும் அஞ்சாமல் - அப்படிப் பறித்த ரோஜாக்கள் தான் இந்தப் பதினைந்து. - ஆனால், இப்படிப் பறித்த ரோஜாக்கள் அல்ல அந்த நூற்றைம்பது. அவைகளெல்லாம் பணத்தால் வெற்றிபெற்ற ராஜாக்கள். ஆகவேதான் நூற்றைம் பது சுலபமாகக் கிடைத்தது அவர்களுக்கு. பண மிருந்தது; பத்திரிகை பலமிருந்தது; படை இருந் தது; அதிகாரமிருந்தது; அந்த அதிகாரத்தைப் பிர யோகிக்கின்ற ஆணவம் இருந்தது. இவ்வளவும் இருந்த காரணத்தால் அவர்கள் அதிக இடங்களைப் பெற்றார்கள். எப்போதுமே, சுலபமாகக் கிடைப்ப தற்கு அவ்வளவு பாராட்டு இருக்காது. தேடித்தேடி அலுத்து, கஷ்டநஷ்டங்களை ஏற்று, வேதனை புரியிலே பயணம் நடத்திக் கிடைப்பது இருக்கிறதே, அதற்கு அதிகமான பாராட்டு நிச்சயமாக இருக்கும். ஆகவே தான் நீங்கள் பாடுபட்டுத் தேடியதைப் பாராட்டு கிறீர்கள். பாடுபடாமல் வந்ததைப் பாராட்டுவதற்கு யாரும் தயாராக இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/83&oldid=1703269" இலிருந்து மீள்விக்கப்பட்டது