உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 வஞ்சகர்களாகிய உங்களுக்கு வழக்கறிஞராக மாறி - விடுதலைப்போர் நடத்திய எனக்குத் தண்டனை தரவேண்டுமென்று மன்றத்தில் பிரார்த்திக்கும் அவரை, காலமும் - அவர் பணிகளும் மன்னிக்குமாக! செய்த பழம்பெரும் இதோ நான் பயங்கரக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி நிற்கிறேன். அடுத்த நாட்டுப் படைகள் உங்கள் உதவிக்கு வர, சிறிது காலதாமதம் ஏற்பட் டிருந்தால் - என் முன்னே நீங்கள் எல்லாம் குற்ற வாளிகளாக நிற்பீர்கள். அதை நான் மறுப்பதற் கில்லை. ஆனால் ஒன்று, ஆட்சியையே மாற்றவேண்டு மென்ற எண்ணம் எப்போது எங்களிடையே எழுந் ததோ - அப்போதே உங்கள் கொடி - கொற்றம் ஆகியவைகளை அலட்சியப்படுத்துகிற நிலையும் ஒப்புக்காக அவைகளுக்கு அடங்கி நடக்க வேண்டிய நிர்ப்பந்தமும் மட்டுமே எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்பதை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். - வ - ஆட்சியை மாற்றுவோம்; எங்கள் நாட்டைப் பெறுவோம் என்ற முழக்கம் கிளம்பிவிட்ட பிறகு உங்கள் கொடியும் சட்டமும் எங்களுக்கு உயிரற்ற பிணம் போலத்தான். பிணங்களைக் கொளுத்தித் தான் தீரவேண்டும். அதற்கான சூழ்நிலை அரும் பாத காரணத்தால் - திராவகத்தில் பதம் செய்யப் பட்டு, அழுகாமல் கெடாமல் பாதுகாக்கப்பட்ட சவங்களாகக் கொலுவீற்றிருந்தன உங்கள் கொடி யும் சட்டமும். நீங்கள் அவ்வளவு பெருமை கொடுத் துப் பாதுகாத்தீர்கள் உங்கள் கொடியை! அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/139&oldid=1703688" இலிருந்து மீள்விக்கப்பட்டது