உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

041 ஒரே யொரு போர் ! தோழர்களே! தோழர்களே !! நெல்லை மாவட் டத்தின் மாநாட்டிலே தலைமை தாங்கும் பெரும் பொறுப்பை எனக்களித்த மாவட்டக் கழகத்தினருக்கு எனது நன்றி. கோவில்பட்டியில் கூடும் இம்மா நாட்டிலே, தலைமை வகிப்பதிலே குறிப்பிடத்தக்க அம்ச மொன்றுளது. சென்ற ஆண்டு திராவிட முன் னேற்றக் கழகத் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரின் மாநாட்டிலும் கலந்துகொள்ளுகிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்ளுகிறேன். "மாநாட்டுக்கு நீங்கள் தலைமை வகிக்க வேண்டும் கருணாநிதி!" என்று மாவட்டக் கழகத்தினர் அன்புக் கட்டளை பிறப்பித்தபோது ஆயிரம் ஆச்சரியக்குறிகள் என் உள்ளத்திலே நடன மாட ஆரம்பித்தன. அவைகளோடு கேள்விக் குறி களும் சேர்ந்து கொண்டன. என் இதயமே ஒரு அதிசய நாடகசாலையாகி விட்டது. பெருமைக்காகச் சொல்லவில்லை தோழர்களே ! புதுச்சேரியிலே என்னை அடித்து நடுத்தெருவில் வீசி விட்டுப் போய்விட்டார்கள் ஐந்து ஆறு ஆண்டு களுக்கு முன்பு. அப்போது - அந்த ஆண்டு - - அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து - நடந்த மாநாடு எதிலுமே என்னைத் தலைமை வகிக்க யாருமே கூப்பிடவில்லை. இப்போது திடீரென்று இப்புதுமை P

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/145&oldid=1703694" இலிருந்து மீள்விக்கப்பட்டது