உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி கூட இரண்டு லட்சம் பேர் கூடிய மகா நாட்டை நடத்திக் காட்டுகின்ற அளவுக்கு மக்கள் உள்ளத்தில் குடியேறி விட்டவர்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாததல்ல! ம கம்யூனிஸ்டுகள் நம் சக்திக்கு ம திப்பு கொடுக் கிறார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல; காங்கிரஸ்காரர்கள் கூட நம் சக்திக்கு மதிப்பளிக்கிற காரணத்தால்தான் ஓரளவுக்கு நம்மை இருட்டடிப்பு செய்யாமல் நம் செய்தி களைப் போட முன் வந்திருக்கிறார்கள்! நம் செய்திகளைக் காங்கிரஸ் ஏடுகள் போடுவதால் நாம் காங்கிரசின் கங்காணிகள் என்று கூறுவது கடைந்தெடுத்த பொறாமைச் செயல்! கம்யூனிஸ்டு ஏடுகளும்தான் மாநாட்டுச் செய்தியைப் போட்டன. அதனால் நாம் கம்யூனிஸ்ட் கங்காணிகளா? க சோஷலிஸ்ட் ஏடுகள் கூடத்தான் அதிக அளவில் போட்டன. அதனால் நாம் சோஷலிஸ்ட் கங்காணிகளா? தினத்தந்திக் கூடத்தான் போட்டது; அதனால் நாம் பிரஜா கட்சிக் கங்காணிகளா? பெரியாருக்கு விவாகம் நடைபெற்றபோது மாதவ மேனன் போன்ற மந்திரிகள் ஆதரித்து பேசினார்கள்! 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/29&oldid=1706269" இலிருந்து மீள்விக்கப்பட்டது