பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பெரிய கண்ணாடி ஜாடி யொன்றில் புது ரத்தம் இருந்தது. மனித உடலிலிருந்து ரத்தம் வடித்தெடுக்கும் கருவியுமிருந்தது. 'இதெல்லாம் என்ன ?' என்று உறுமினார் இன்ஸ்பெக்டர். 'ஆராய்ச்சிக் கருவிகள்' என அமுத்தலாகப் பதிலிறுத்தார் ருத்ரமூர்த்தி. - 'அதுதான் தெரிகிறதே. ஆராய்ச்சி என்ற பெயரில் நீர் பெண்களைக் கொலை செய்கிறீர். இதுவரை இந்த வட் டாரத்தில் எட்டுப் பெண்களை ரத்தபலி செய்துவிட்டீர். இன்று நடந்தது ஒன்பதாவது பலி. அதுவும் எங்களுக்குத் தெரியும்’ என்று கர்ஜித்தார் இன்ஸ்பெக்டர். ருத்ரா சிறு சிரிப்புச் சிந்தினார். 'சாட்சி இருக்கிறதா ?' என்று அலட்சியமாகக் கேட்டார். - 'இன்று நடந்ததை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். மற்றக் கொலைகளுக்கு அந்தந்தப் பிரேதங்களைப் பற்றிய விவரங்களே சாட்சி.' 'பிரேதங்கள் பேசாதே ஐயா !' 'குமாரி பவானி பேச முடியும். அவளேயும் நீர் சாகடித்த அழகிகள் வரிசையில் சேர்த்திருந்தால் அது தவறு என்பதைப் புரிந்து கொள்ளும். உமது ரத்த புஷ்ப ஆராய்ச்சி பற்றி நீர் அவளிடம் சொல்லியதை அவள் வெளிப்படுத்தி விட்டாள்.' ருத்ரமூர்த்தியின் கண்களில் ஒர் ஒளி கனன்றது. அது அறிவின் வெற்றி என்று நீரும் ஒப்புக் கொள்கிறீரா? ஆராய்ச்சி இயற்கையையே முறியடித்து விடுகிறது. இல்லையா ? சாதாரண புஷ்பத்திற்கு அதி விசேஷ அழகும், உயிர்ப்பும், வர்ண ஒளிக் கவர்ச்சியும் கொடுக்க முடியும் என நான் கண்டு பிடித்து விட்டேன். அதற்கு இந்தப் புஷ்பங்களே சாட்சி. வீட்டின் பின்புறத் தொட்டிக் கட்டிலே வளரும் செடிகள் சாட்சி. செடிகளைக் கவனியுங்கள்.