உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 புதுமைப்பித்தன் கதைகள் மருதியுடைய பெயரும் அந்த ஜாபிதாவில் சேர்ந்தது. இந்தச் சமாசாரம் மருதிக்கு எட்டியதும், அவளுக்குத் தெளிவு ஏற்பட்டது. வாசவன்பட்டிக்குப் போய்விட லாம் என்ற நம்பிக்கையிலோ என்னவோ, சிறிது நடமாட வும் முடிந்தது. ஆனால் பலவீனம் மாறவில்லை. புதன்கிழமைக் கப்பலுக்கு அனுமதிச் சீட்டு, சம்பளம் -- எல்லாம் வந்து சேர்ந்தன. VII வெள்ளிக்கிழமை மத்தியான்னம் வெயிலின் ஆதிக்கம், ஹிட்லரை நல்லவனாக்கியது. மருதி குளக்கரை வழி யாகச் சேரியை நோக்கி நொண்டி நொண்டி நடந்துகொண் டிருந்தாள். அவள் இருந்த நிலையில் யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. கையில் ஒரு கம்பு, தலையிலும் இடுப்பிலும் இரண்டு மூட்டைகள். இடையில் வைத்திருந்த மூட்டையில் நாலைந்து கதலிப் பழம், இரண்டு ஜோடி வளையல்கள், எல்லாம் வெள்ளைச்சிக்கு. - சேரியில் பறையும் தம்பட்டமும் அடிப்பது அவள் காதில் ஒலித்து நடைக்கு வேக மூட்டியது. மூலை திரும்பி னால் ஊர்ப் பொட்டல், அதற்கப்புறம் அந்த மூலையில் வெள்ளையன் குடிசை. சுடலைமாடன் பீடத்தை அணுகி யாய்விட்டது. அப்பொழுது மேள தாள முழக்கங்களுடன் அந்த மத்தியான்னப் பன்னிரண்டு மணி வெயிலில் ஓர் ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. முன் பக்கம் சிலம்பம், ஆட்டத் துடன் பறை! அதற்கப்புறம் ஒற்றைக் குதிரைச் சாரட் டில் மாப்பிள்ளையும் பெண்ணுமாக ஓர் ஊர்வலம்! நெருங்கிப் பார்க்கிறாள் மருதி, கண் கூசுகிறது. கொண்டையில் பூவும், நெஞ்சில் சந்தனமும். ஜரிகைக் குல்லாவும் வைத்து உட்கார்ந்திருப்பவன் - வெள்ளையன் தான்! என்ன ஜோராக உட்கார்ந்திருக்கிறான்! அவள்