இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
வேர்விட்ட மரம்போல வீட்டி னுள்ளே
வினைபுரிவாள் மனைவியெனத் தேடிப் பார்த்தான்!”
ஊர்மட்டும் இருந்ததவன் வீடங் கில்லை!
உசாவியதில், இருப்பிடத்தை யாரோ சொன்னார்.
“சீர்கெட்டாள் வாழ்வதற்கு விடவோ?” என்று,
சிறிஎழுங் கடலலைபோல் பாய்ந்து சென்றான்!
“யார் ? எட்டிப் போம் உடனே !” என்ற நீலா:
“ஏதுமக்கே என்மீதில் உரிமை?” என்றாள்!
“முன்பொருநாள் தாலிகட்டிச் சென்றீர்! அன்று.
முதியவளின் மரணத்தால் தனித்தேன்! நீரோ.
முன்பனியாய் மூடுபனி போல நின்றீர்;
முறைகெடவுங் காரணமாய் ஆனீர்! ஆனால்,
பின்பணியாய்த் தண்பனியாய் வந்தே, எம்மைப்
பேணிவரக் கந்தப்பன் இலாதி ருந்தால்...
என்பொழுது விடிந்திடுமோ” என்று கூறி,
இரட்டைத்தாழ் இட்டுவிட்டாள் நீலா! தப்பா?
4