இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
கூட்டுறவுத் திட்டத்தின் கொள்கை, நோக்கம்,
குணம்மற்ற யாவையுமே விளக்கிச் சொன்னன்.
நாட்டுயர்வுக் கானகல்ல இயக்கம் என்று
நல்லோர்கள் பாராட்டும் மொழிபு கன்றான்.
வீட்டுக்கு வீடிதிலே பங்கு பெற்று,
விளைகின்ற பயன்முற்றும் பொதுவாய் ஆக்கி,
ஈட்டுகின்ற சமவாய்ப்புக் காண்போம்; என்றே
எடுத்துரைத்தான்; தடுத்துரைக்க ஆளே இல்லை!
மறுநாளே ஆளுக்குப் பத்து ரூபாய்
மதிப்புள்ள பங்குகளை ஊரா ரெல்லாம்
விறுவிறுப்பாய் வாங்கிடவே, பதிவு செய்யும்
வேலையெல்லாம் விரைவாக முடித்து விட்டார்!
சுறுசுறுப்பாய் அரசாங்க உதவி பெற்றுச்
சொந்தமுதல் மிகுதியாக்கி ஊருக் கென்று
வறுமையோட்டும் கூட்டுறவுப் பண்ட சாலை
வகையாக முனியப்பன் அமைத்துத் தந்தான்!