பக்கம்:அன்பு மாலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை

57


கோணுதல்இல் லாதஉளச் சாந்தியினைக் கூடக்
கூறுகின்றான் நன்மொழியைக் குழந்தையைப் போல
மானுடைய சிரிப்பெல்லாம் சிரிக்கின்றான்; இந்த
மாஞானி ராமசுரத் குமார்போலே உண்டோ?

144

நீணுதல் - நீளுதல். மானுடைய - பெருமையை உடைய.

அருணயிலே வந்திருந்தால் சோதிமலை தன்னை
அன்போடே பார்த்திடலாம்; திருக்கோயிற் குள்ளே
தருணமுறு சிவலிங்கம் கண்டிடலாம் என்றே
தாம்வருவர்; இக்காலை மற்றாெருநன் மூர்த்தி
கருணையுற இருக்கின்றான்; அவன்யாரோ என்னின்,
காணுமின்நீர்; ராமசுரத் குமாரென்னும் பேரால்
தெருள்நயப்பார் வந்தடிவீழ்ந் திடஅருளைச் செய்யும்
சிற்பரனாம் மாயோகி இருக்கின்றான் அம்மா!

145

தருணம் - சமயம். தெருள்- தெளிவு.

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

இம்மா நிலத்தில் பொருள்களெல்லாம்
என்றும் இருக்கும் எனஎண்ணிச்
சும்மா போதைப் போக்குகின்ற
சுமடர் தம்மால் என்பயனாம்:
விம்மா நின்றே மனமுருகி
விரைந்து கண்ணீர் மிகப்பெருக்கி
அம்மான் ராம சுரத்குமார்
அடியில் வீழ்வீர், நலமுண்டே.

146

சுமடர்- அறியாதவர்.

ஆசை போக வேண்டுமெனின்
அகந்தை நீங்க வேண்டுமெனின்
மாசார் உளத்தில் மாயையெனும்
மாய விலங்கை அறஎண்ணின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/63&oldid=1460019" இலிருந்து மீள்விக்கப்பட்டது