42
ளெல்லாம் எனக்குப் பெரிதா? என்னமோ தங்கை மகளாச்சே, சொந்தம் விட்டுப் போகக் கூடாதே; இந்தச் சொத்தெல்லாம் அனியாயமாகப் பிறத்தியானுக்குப் போய்விடக் கூடாதே என்று தான் பார்க்கிறேன்.
காமா: ஏண்டா தம்பி. இங்கே வந்திருக்கிறது யாருன்னு பாத்தியா?
நடராஜன் : யாரது?
காமா : மாமா வந்திருக்காருடா! இங்கே வந்து பாரு!
நட : யார்? மாமாவா வாங்க வாங்க. ஏது இந்த ஏழைகள் மேலே இவ்வளவு தயவு வந்தது!
பொன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் தான் என்னமோ நினைத்துக் கொண்டு ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள். நான் வீட்டை விட்டு ஒரு நாளைக்கு வெளியே புறப்பட வேண்டுமானால் சாமான்யமாக இருக்கிறதா, என்ன?
காமா : அதெல்லாமிருக்கட்டும். இப்போது மாமா எதுக்காக வந்திருக்கார் தெரியுமோ!
நட : தெரியாமலென்ன? உன்னைப் பார்க்க வந்திருப்பார்.
காமா : உனக்கு ஒரு வேலை பார்த்துத் தர்ராறாம்.
நட : அதுதான் சொன்னேன். இப்போதுதான் தயவு பிறந்திருக்கிறதென்று.
காமா : அதோடு மட்டுமா, நம்ம வீட்டுக் கடனை யெல்லாம் தீர்த்துடறேன்னுட்டாரு!