இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருவண்ணுமலைச் சைவத் திருமடத்துத் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- வழங்கும் புகழ் நிறை வாழ்த்து
மூவா உலகில் மூத்த தமிழர் வாழ்வியற் கலயை வண்ண முறத்தேர்ந்(து) ஈருடல் ஒருயி ராகச் செம்புலப் பெயல்நீர் போலப் பெட்புற் கர்தலில் ஒன்றிக் கலந்துநல் லுணர்வினிற் சிறந்து வாழ்தலே தவம்எனத் தேறித் தெளிந்தனர். கண்ணுதற் பெருமானும் மலைவளர் மங்கையும் ஒன்றிக் காதலித் துடனுறை வாகி - உயிரொன் ருகி உணர்வொன் ருகி வேறுவேறுபடலம் ஒருட லாகி அம்மை யப்பன் ஆகிய அருமை மாட்சியே, மாட்சி! காட்சியே காட்சி!