98
அறிவியல் திருவள்ளுவம்
"துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை” (669)
என்னும் குறட்பா
"இன்பம் பயக்கும் வினை செய்க;
துன்பம் உறவரினும் செய்க;
துணிவு ஆற்றிச் செய்க--"
என அறிவிக்கின்றது.
இக்குறளில் எடுத்துக் கொள்ளப்பட்டது இன்பம். அதனைத் துணிவு ஆற்றி என்றது, நெஞ்சத்துணிவைத் துண்டுவதாகிய ஊக்கத்தைக் குறிக்கும். .ெ ந ஞ் ச த் துணிவால் எழுந்த ஊக்கத்துடன் செய்க என்றது, இன்ப ஊக்கத்தில் கிளர்ச்சியால் நேர்வது. எனவே, வள்ளுவர் குறள், உளவியல் வல்லுநர் அடிநிலை விளக்கத்தைப் பின் வருமாறு குறித்துக் காட்டுவதாகிறது.
வள்ளுவர் : | வல்லுநர் : | |
இன்பம் பயக்கும் | : | இன்ப |
துணிவு ஆற்றி | : | ஊக்க |
செய்க | : | கிளர்ச்சி |
இது போன்றே வல்லுநர் காட்டிய 'துன்ப ஊக்க அமைதி'யை வள்ளுவக் குறள்
"இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான்
துன்பம் துடைத்துான்றும் தூண்" (628)
என்பது காட்டியது. இக்குறளில் துன்பத்தைப் போக்கும் உறுதிப்பாடு கூறப்பட்டது.