இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
அறிவியல் திருவள்ளுவம்
(அற்றது அறிந்து) | ||
’போற்றி உண்ணும் உணவு' | — | சீருணவு |
’மாறுபாடில்லா உணவு’ | — | காப்புணவு |
'அளவறிந்து உண்ணல்’ | — | ஒழுங்குணவு |
இவ்வாறு இக்கால உணவு அறிவியலை, திருவள்ளுவம் விளக்குவதைக் காண்கிறோம்.
வயிற்றுத் தீ
அருந்தியது அற்றுப்போவதை-அஃதாவது செரித்து ஊட்டமாவதை இக்கால அறிவியல் மிக விளக்கமாக ஆய்ந்துள்ளது. செரிமானம் உடம்பின் வெப்ப நிலையால் அதிலும் வயிற்று வெப்ப நிலையால் முழுமையடைகிறது.
உயிரிகளின் உடம்பின் வெப்பமும் அவை வேலை செய்வதற்கு வேண்டப்படும் வெப்பமும், செரிமான உணவு உயிர்வளி (Oxygen)யுடன் 'உயிரணுக்' (Cells)களில் வினைப்படும் போது வெளியாகின்றன.”
இது செரிமானத்திற்கு வெப்பம் செயற்படுவதை விளங்குகின்றது.
மேலும் விளக்கமாக,
'கரிநீரகி (Carbohydrate), ஊட்டப்பொருள் (Protein). கொழுப்பு ஆகிய மூன்றும் எரிக்கப்பட்டு உடல் ஆற்றலைத் தருகின்றன.'
மேலும் விளக்கமாக,