பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F 3

§

காலமறிந்து தாக்குவதற்காகப் படை வீரர்கள் பதுங்கிட் பதுங்கி எதிரியின் எல்லையை எட்டிப் பார்ப்பதுபோல்-விண் மீன்கள் ஒவ்வொன்ருகத் தலையைக் காட்டின.

அவற்றின் கண்கள் சிவக்திருந்தன. நெடுந்துாரத்தில் செல்லுகின்ற தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப்போல, சில நேரத்தில் விண்மீன்கள் தெரிய ஆரம்பித்தன.

ஒரு மனிதனுடைய வாழ்நாட்கள் பறக்கின்ற பறவை யைப் போல செல்லுகின்றது என்ருல்-அந்தப் பறவைகள் கூடுகட்டுகிற இடம் விண்மீன்கள் மீதுதாளு?

என்னுடைய மன உளைச்சலிலிருந்து நான் விடுதலை பெறுவதற்காக என் கையில் ஒரு விளக்கு இல்லையே என்று இயற்கையெனும் கலைஞனைப் பார்த்துக் கேட்டேன்;

அவன் தன் நெற்றியைக் சுருக்கி, கால்களை அகல விரித்து உன்னே நான் இருட்டுக்கு அழைத்துச் செல்லவா ஒளி சூரியனைப் பகலிலே தந்தேன்?

நீ தாமரை பூத்த தடாகத்தில் குளித்துவிட்டு-மல்லிகை மணக்கும் யூ ங் கா வி ல் ஒய்வெடுத்தபின்-வண்டுகள் மொண்டு வைத்த தேனை வாரி உண்ட பின்-உன் வழிப் பயணத்தை என்னிடத்தில் முடித்துக்கொள்-என்று நான் சொல்ல வில்லையா?

மறை பட்ட பொருளை வெளியாக்கி-சிறைபட்ட சீவனை விடுதலை செய்து-முட்டாள் தனத்தை அறிவு மயமாக்கிகுழந்தையை வாலிபனுக்கி-வ்ாலிடத்தை வயதாக்கி-மேலே கீழாக்கி-கீழை மேலாக்கி-சக்தியிலே நீ விழாமல் இருப் பதற்காக உனக்கென ஒரு ஒளியை உருவாக்கியவன் நான்.

அந்த ஒளி-வானத்தில் நிலவாகவும்-பூமியில் உன் மன அறிவாகவும் இருப்பதை நீ காணவில்லையா?

நீ கேட்ட பிறக உன் கோளுக்கு இணங்கி அதோ அந்த வானவட்டத்தை உனக்குப் பரிசளிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/137&oldid=564581" இலிருந்து மீள்விக்கப்பட்டது