பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

187



தமிழகத்தின் நிதியே!

சாற்றவனே - தமிழ் சாற்றவனே!

வீற்றவனே! - உள்ளில் வீற்றவனே!

ஏற்றவனே நாட்டுக்கு, ஏற்றவனே!

கடும்புலமை சொல்லடுகிக்கி, விடும் வார்த்தை வேகத்தை - மீறி நின்ற வேகமே!

நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்குமேல் நின்ற, தமிழ் நிலவே!

கடும் கோபம் தழல் எரியா - கீழ்வானில் உதித்த பரிதியின் உருவே!

மூளைக்கு அலங்காரமிட்டு - மனிதச் சாலையிலே வருகின்ற வடிவா நீ?

இல்லை இல்லை! மூளைக்கு வேர் நீ! வேரோடித் திளைக்கின்ற நீர் நீ!

நீருக்கே வேறான ஊற்று நீ! ஊற்றே முளைக்கின்ற கரு நீ!

கருவுக்கே ஆதாரம் நீதான்!

மெய்யகத்தே விளைகின்ற எண்ணக் கலவையெல்லாம் -

நெய்யகத்தே கொண்டிருக்கும் விளக்கொளியால் பார்த்து -

பொய்யகற்றி; புதுமையேற்றி -

வையகமே வாழ்த்துகின்ற நிலைக்குக் கொண்டு வந்த அண்னனே!

வைதாலும் - உன் சிறப்பை மாற்றார் இழிமொழியால் கொய்தாலும் - எதிரிக்கும், இதயத்தின் தாள் திறந்து - உதவிக்கு அறிவூட்டும் உத்தமனே!

பாடற்கு இனிய வாக்களிக்கும் தேக்குமரத் தோப்பருகில் நீக்கமற நிழலாடும், நற்றமிழ்க் குரலெடுத்துப் பாடுகின்ற குயிலே!