பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


jö6 |சலம் - கடல்நீர்; நிரந்து ஏறி பரவியிருந்து; உலங்கு - பெருநுளும்பு - (பெரும் கொசுக்கள்); நலம். பெண்மைக்கு உரிய நாண் முதலிய குணங்கள்; நடலை நோய்-நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்ப் படுகிற நோய்.1 - பாசுரத்தின் பொருள் வெளிப்படை. சில சொற்ருெடர் களின் நயம் காண்போம். மாவலியை நிலங் கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர் காள்-பயனையே கருதுபவர்களான (பிரயோஜநாந்தர பரர்களான) தேவர்களுக்காகத் தன்னை இரப்போளுக்கிக் கொண்டு காரியம் செய்த பெருமான் எழுந்தருளியிருக் கின்ற தேசத்தில் வாழும் நீங்கள் பயன்கருதாத எனக் காகக் (அநந்யப் பிரயோஜநையான எனக்காகக்) காரியம் செய்யவேண்டாவோ? எம்பெருமான் ஒர் அசுரன் பக்கல் சென்று காரியம் செய்ததுபோல் நீங்களும் ஒர் அசுரன் பக்கல் சென்று காரியம் செய்யவேண்டும் என்ரு நான் சொல்லுகின்றேன் ? இல்லையே. உடையவன் பக்கலிலே யன்ருே உங்களைப் போகுமாறு வேண்டுகின்றேன்? என்ற குறிப்பு இதில் புலப்படுவதைக் கண்டு மகிழவேண்டு கின்றேன். (ஏறிப் பொழிவீர்காள்!) சாய்கரத்தை உயரவைத்துத் தண்ணிர் வார்ப்பாரைப் போலே, காணவே விடாய் கெடும்படி உயரவேறி வர்ஷிக்கிறி கோளிறே; அவன் வர்த்திக்கிற தேசத்திலே அவனேடே உங்களுக்கு ஒரு ஸம்பந்தமுண்டானல் அவன் ஸ்வபாவமுண்டாக வேண்டாவோ ?” என்ற வியாக்கியானம் காண்மின். - 'உலங்கு என்ற பெருங்கொசுக்கள் விளாம்பழ த்தில் மொய்த்தால் அதன் சாறெல்லாம் சுவ றிப் போவது 97, வர்த்தித்தல் இருத்தல்,