14
அந்த நாய்க்குட்டி எங்கே?
“ஓ நிச்சயமாக !”என்று தலையைப் பலமாக ஆட்டினான் சிறுவன்.
“அல்லி!” அழைத்தார் சர்க்கஸ் உரிமையாளர்.
நீலத் திரையை நுனி விரலால் நீக்கிக் கொண்டு ஒரு சிறுமி வந்தாள். அவள் கையில் அழகிய நாய்க்குட்டி ஒன்று இருந்தது.
பூபாலன் கண் இமைக்காமல் அந்த நாய்க்குட்டியையே பார்த்தவாறு இருந்தான். அந்தச் சிறுமி நெருங்கி வந்தாள். பூபாலன் அந்த நாய்க் குட்டியைக் கை நீட்டி வாங்கினான். ஆனால் அது ‘வாள் வாள்’ என்று விடாமல் குரைத்தது.
அடுத்த கணம், “ஊஹூம், இது என் நாய்க்குட்டி இல்லவே இல்லை! என்னை ஏமாற்றப் பார்க்கிறீங்க. என் நாய்க்குட்டியாயிருந்தால், என்னைக் கண்டதும் வாலை ஆட்டுமே என் நாய்க் குட்டியை எனக்கு அடையாளம் தெரியாதா? பொய் சொல்லி நீங்க என்னை ஏமாற்றப் பார்க்கிறீங்க...!” என்று கோபம் பொங்கப் பேசிவிட்டு அந்த பங்களாவிலிருந்து உடனடியாக வெளியேறினான் பூபாலன்.
அந்த ஸ்டுடியோ ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.
பூபாலன் வியர்வையைச் சட்டைத் தலைப்பால் துடைத்து விட்டவாறு, கூர்க்காவின் முன் நின்றான். அவன் ஏதோ கேட்டான். பையன் என்னவோ சொன்னான். இருவருக்கும் இடையில் இந்தியும் தமிழும் உயிரை விட்டுக் கொண்டிருந்தன. கடைசியில் பூபாலன் சைகை காட்டி, தான் உள்ளே செல்ல வேண்டுமென்பதையும், அங்கு தன் தோழி பூங்கோதை இருக்கிறாள் என்பதையும் சொன்னான். ஒன்றும் பதில் சொல்லாமல்