18
அந்த நாய்க்குட்டி எங்கே?
“ஐயோ, அப்பா! ஐயோ, அம்மா!” என்று அலறினான் பூபாலன்.
அடுத்த தடவையும் சர்க்கஸ்காரன் பயங்கரமாகச் சிரித்தான்.
“தம்பி, உன் அப்பாவையும் அம்மாவையும் ஏன் வீணாகக் கூப்பிடுகிறாய்? அவர்கள் இருவரும் உன்னை என் வசம் ஒப்புவிக்கச் செய்த சூழ்ச்சிதான் இப்போது உன் கண்முன்னாலே நாடகம் ஆடுகிறதே? பாவம்...!”
“இரக்கப்படக் கூட உமக்கு நெஞ்சு இருக்குதா..?”
“இரக்கப்பட மட்டுமல்ல, உன்னை அகில இந்திய சர்க்கஸ் விளையாட்டுக்காரனாக ஆக்கவும் எனக்கு இதயம் இருக்கிறது; துணிவு இருக்கிறது”
“பேஷ்!“
“பேஷ், பேஷ்! அப்படியென்றால், என் இஷ்டப்படி நீ இங்கேயே என்னுடனேயே தங்கி விடுகிறாயா?”
“அது பகற்கனவு ஐயா, பகற்கனவு!”
“அப்படியென்றால் முடியாதென்றுதான் மறுமுறையும் சொல்கிறாயா?”
“ஆமாம், முடியாது...! முடியாது...! முடியவே முடியாது...!”
“அப்படியென்றால் இனி நீ இங்கிருந்து மீளவும் முடியாது. இதோ, உன்னை விழுங்கி ஏப்பம் விடக் காத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறுத்தையிடமிருந்து தப்பவும் முடியாது. ஆமாம் மாஸ்டர், முடியாது! முடியாது! முடியாது!”
“எனக்கு இனி என்னைப் பற்றிக் கவலையில்லை. காணாமற் போன என் அருமை நாய்க்குட்டி கிடைச்சும் கடைசி நேரத்திலே