உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கதிர்காம யாத்திரை

 வேண்டும். வ்ழியில் காட்டு மிருகங்கள் வரும். கதிர் காமவேலனிடம் பக்தியில்லாதவர்கள் அந்த விலங்குகளுக்கு இரையாக வேண்டும். முக்கியமாக யானைக் கூட்டம் இந்த வழியில் மிகுதி. உண்மையான பக்தியோடு அரோஹரா என்று சொன்னல் யானைகள் வழி விடும். வழியில் உள்ள சிங்களவ வேடர்களும் பொல்லாதவர்கள். காசு பணம் கண்டால் கொலைக்கும் அஞ்சாதவர்கள்" என்று கதை பேசுகிறார்கள். ஏதோ ஒரு காலத்தில் கதிர்காமத்துக்குப் போவது கஷ்டமாக இருந்திருக்கலாம். போக்கு வரத்து வசதிகள் இல்லாத காலம் அது. நம்முடைய காட்டில்கூடப் பழனிக்குப் போவது அந்தக் காலத்தில் கஷ்டந்தான். பழங்காலக் கதையை இன்னும் அப்படியே சொல்லிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.

கதிர் காமத்துக்குக் கொழும்பிலிருந்துதான் யாத்திரிகர்கள் பெரும்பாலும் வருகிருள்கள். கொழும்பிவிருந்து சற்றேறக் குறைய 170 மைல் துரத்தில் கதிர்காமம் இருக்கிறது. அழகான ரோடு வசதி உண்டு. இடையிடையே பல ஊர்கள் இருக்கின்றன. எந்த வழியாக வந்தாலும் திசை மாராவுக்கு வந்து அங்கிருந்துதான் போக வேண்டும். திசை மாரா வரையில் நல்ல தார் ரோடு;. அப்பால் சற்றுச் சுமாரான ரோடு இருக்கிறது.

திருவிழாக் காலங்களில் லட்சக் கணக்கான ஜனங்கள் வருவார்களாம். அந்தக்காலங்களில் திசை மாராவோடே கார்களெல்லாம் நின்றுவிடும். அதற்கு அப்பால் நடந்தே செல்வார்கள் பக்தர்கள். அரோஹரா அரோஹரா என்று சப்தம் போட்டுக்கொண்டே போவார்கள். யாராவது, கதிர் காமம் போகும் சாலையில் போனால் சாலைக்கருகில் வாழும் ஜனங்கள், "அரோஹரா!" என்று சொல்கிறார்கள். திசை மாராவில் இந்த 'அரோஹரா!' ஒலி ஆரம்பமாகிறது.

திசை மாரா என்ற சிங்களப் பெயரைப் பற்றி, ஆராய்ந்தேன். பககத்தில் இருந்தவர்களைக் கேட்டேன்.