Í G கதிர்காம யாத்திர்ை
காலால் நடந்து வரும் அன்பர்களுக்கு உண்டாகும் அநுபவத்தை என்னவென்று சொல்வது! பசிக்கப் பசிக்க உணவுக்கு ருசி அதிகமாகிறது. காட்பட காட்படப் பிறக்கும் குழந்தையின் அருமை மிகுதியாகிறது. பல நாள் பிரிந்து, காணவில்லையே என்ற ஏக்கம் மிக மிகப் பின்னலே அமையும் கூட்டுறவிலே ஆனந்தம் எல்லேயற்ற தாகிறது. அப்படியே இறைவன் எழுந்தருளியிருக்கும் கலம் எவ்வளவு அடைய அரியதாக இருக்கிறதோ, அவ்வளவு அதன்பால் ஒப்பும், தரிசனத்தின்போது உணர்ச்சியும் மிகுதி யாகின்றன. மலேமேலே கோயில்களைக் கட்டிப் பிரார்த்
தன செலுத்துவதற்கு அங்கே போக வைத்த பெரியோர்.
கள், மனிதனுடைய மன இயல்பை எவ்வளவு நுட்பமாக துனர்ந்திருக்கிருர்கள்! வருத்தமின்றிக் கிடைக்கும் பொருளில் மனிதனுக்கு அருமைப்பாடு பிறப்பதில்லை.
கடல் கடந்து நாடு கடந்து காடு கடந்து கதிர்காம வேலனைத் தரிசிக்க வந்த பழங்கால அன்பர்களுக்கு கிச்சய மாக அதிகமான இன்ப உணர்ச்சி ஏற்பட்டுத்தான் இருக்கும். மனசிலே அன்பு முதிர்ந்தவர்களுக்கு ஆண்டவனே எங்கே கண்டாலும் நெஞ்சு நெகிழும். அத்தகையவர் களுக்கு எல்லாப் பொருளிலும் இறைவனேக் கண்டு உருகும்
ஆற்றல் இருக்கும். கனத்த கல்லாகிய கெஞ்சை யுடையவர் களுக்கு அந்தக் கல் நெகிழ்ந்து கசிந்து கரைந்து உருக
வேண்டுமே! அதற்காகத்தான் இப்படியெல்லாம் அகலந்து திரிந்து ே தடிக் கண்டுபிடித்தால், தலங்களிடம் மதிப்பு ஏற்படு மென்று ஆன்ருேர்கள் கருதியிருக்க வேண்டும்,
கதிர்காமத்தில் பல தெருக்கள் இல்லை. சந்நிதி விதி ஒன்றுதான் பெரியது. வேறு ஒன்றிரண்டு சிறிய விதிகள் இருக்கின்றன. கதிர்காமத்தை மக்கள் வாழ்வதற்காக
மடங்களும் உள்ள தலம் வீதிகள் முழுவதும் மடங்களும்
சத்திரங்களுமாக இருக்கின்றன. தல யாத்திரையாக