பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.

18.

19.

இனைய செவ்வேள், மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்கற் பாலார்” என்ற கந்த புராணச் செய்யுளை அடி யொற்றியது இது. எழில் - இந்தப் பால முருகனுடைய அழகு. சாற்றுமதோ - சொல்லுவதற்கு அடங்குமோ ? éy fy மருங்கில் - சிவபெருமானுடைய - இடப் பாகத்தில் உள்ள உமை - பார்வதி. மகிழ்ந்து - மகிழ்ச்சி பெற்று. ஏ அசை நிலை. பால் - தன்னுடைய முலைப்பாலை. வழங்க - ஊட்ட இன்பம் - அதனால் இன்பத்தை. ஏமம் உற - சேஷமம் உண்டாக, பெற்ற - அடைந்த ரத்ன கிரியனை - இரத்தினகிரியில் எழுந்தருளியிருக்கும் பால முருகனை, ஏத்து - துதித்து வணங்குவாயாக, நெஞ்சே - என்னுடைய மனமே.

சேய - சிவப்பான நிறத்தை உடைய திருமேனியை உடையவானகிய குகன் - தகராலயமாகிய குகையில் எழுந்தருளியிருப்பவன். கார்த்திகை மாதர் - கார்த்திகைப் பெண்களாகிய ஆறுபேர். தரு பால் - தந்த முலைப் பால், தெவிட்டியதால் - தெவிட்டிப் போனமையால், ஆய் - தன்னுடைய தாயாகிய பார்வதி தேவி. தரு - கொடுத்த, பாலை - முலைப்பாலை, குடித்தான் - பருகினான். இரத்ன அரும் கிரியில் - அருமையான இரத்தினகிரியில், வேய்தரு - மூங்கிலைப் போன்ற, தோளினை - தோள்களை உடைய வள்ளி நாதன் - வள்ளி நாயகியின் கணவனாகிய பால முருகன் விளங்குகிறான் - எழுந்தருளி யிருக்கிறான். பாய்தரும் - பாய்கின்ற. அன்புடன் - பக்தியோடு. அன்னான் - அந்த பால முருகனுடைய. திருத்தாள் - திருவடியினை, பனிகுவம் - வணங்குவோம்.

பணி அணி ஈசன் - பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிவபெருமான். பிரணவத்தின் பொருள் - பிரணவ மந்திரமாகிய ஓங்காரத்தின் அர்த்தத்தை. பண்புடன் - முறைப்படி. ஏ அசைநிலை. அணிபெற - அழகு உண்டாக. ஓதுக என்று - சொல்லுவாயாக என்று : ஒதுகென்று தொகுத்தல் விகாரம் ஏ அசைநிலை. சொல - சொல்ல. அங்ங்ன் - அப்படியே. அருளியவன் - ஒதிய பால முருகன். திணிபெறு தோளன் - உறுதியைப் பெற்ற பன்னிரண்டு தோள்களை உடையவன். இரத்தின நற்கிரி - நல்ல இரத்தின கிரியில். சேர் - எழுந்தருளி யிருக்கும். முருகன் - பால முருகன். மணி - கிங்கிணி மாலையை அணி - அணிந்த தாளை - திருவடிகளை வணங்கிடின் - பணிந்தால். காலன் - யமன், வருகை - அகாலத்தில் நம் உயிரைக் கொண்டு போக வருவது. இன்று - இல்லையாகும் ; அகால மரணம் நேராது என்பது கருத்து.

போகுவம் - போவோம். நன்று - நன்மை, வாணாளை - வாழும் காலத்தை. நண்ணல் - சேர்தல். ஒன்றிய சேர்ந்த, இன்னே -

27