பக்கம்:இரு விலங்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



viii

சிறப்பு உண்டல்லவா? அதனால் மேலும் மேலும் ஊக்கம் உண்டாகிறது.

 ந்தப் புத்தகம் கந்தர் அலங்கார வரிசையில் பதினே ழாவது நூலாக மலருகிறது. இதில் ஆறு பாடல்களுக்குரிய விளக்கங்கள் உள்ளன.
 முதல் பாட்டில், முருகன் திருவருளைப் பெற்றவர் களுக்குப் பிற விப் பிணி இல்லையென்பதை அழகான முறையில் சொல்கிறார் அருணகிரியார். 'அடியாருக்குப் பிறவியைக் கொடுக்க எண்ணி அவர் பெயரைப் பிறப்போர் பட்டியலில் பிரமன் எழுதினால், அவனுக்கு முருகன் இரு விலங்கைப் போடுவான்' என்று சமற்காரமாகச் சொல்கிறார். அந்தப் பாட்டின் விளக்கம், 'இரு விலங்கு' என்ற தலைப்பில் இருக்கிறது. அதுவே நூலுக்குப் பெயராகவும் அமைகிறது. முருகன் பிரமனைத் தளையிட்டுச் சிறையிட்டான் என்ற கந்த புராணக் கதை அவன் பிறவியைப் போக்கும் பெருமான் என்ற கருத்தையே விளக்குகிறது என்பதை இந்தப் பாட்டுக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. 
 அடுத்த பாடலிலும் நான்முகன் வருகிறான்; ஆனால் அதில் அவன் படைப்புத் தொழில் செய்பவன் என்ற வகையில் ஒரு குற்றச் சாட்டுக்கு ஆளாகிறான், 'செங் கோட்டு வேலவனைத் தரிசித்து இன்புற நான்முகன் எனக்கு நாலாயிரம் க ண் க ளை ப் படைக்கவில்லையே!' என்கிறார் அருணகிரிநாதர். முருகனுடைய பேரெழில் கண்ணினால் அளவிட்டு முடிப்பதற்கு உரியதன்று என்ற கருத்தையே அந்த முறையில் சொல்கிறார். இந்தப் பாட்டில் திருச்செங் கோட்டின் பெருமை வருகிறது. 
 மூன்றாவது பாடலிலும் தொடர்ந்து திருச்செங் கோட்டில் எழுந்தருளியிருக்கும் வேலனை நினைக்கிறார் முன் பாட்டில் அவனைத் தரிசித்த்தனால் உண்டான இன்ப உணர்வு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/10&oldid=1296554" இலிருந்து மீள்விக்கப்பட்டது