உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/168-383

விக்கிமூலம் இலிருந்து

164. கான்பஹதூர் அஸிஸுடீன்சாயப் பகதூர்

அஸிஸுடீன் சாயப் கான் பகதூர் அவர்கள் தென் கன்னடங் கலைக்ட்டராயிருந்து தற்காலம் தென் ஆற்காட்டிற்குக் கலைக்ட்டராக மாற்றிவிட்டதாகக் கேழ்விப்படுகிறோம். இவர் தென்கன்னடங் கலைக்ட்டராயிருந்து காரியாதிகளை நீதிவழுவாமல் நடத்திவந்தவிஷயத்திற்காக குடிகளும் அவர் அவ்விடம் விட்டு நீங்குவதைக்குறித்து மிக்க ஆயாசப்படுகின்றார்களாம்.

ஈதன்றி பொறாமெமிகுத்த அன்னியதேச ஆரியர்களால் தாழ்த்தசாதியோரென்றும், பஞ்சமரென்றும் பாழ்படுத்தியுள்ள ஏழைக்குடிகளின் மீது இதக்கம்வைத்து அவர்களுக்காக வேண்டியபூமிகளைக் கொடுத்து சுகம்பெறும்படியான வழிகளையுண்டுசெய்து அவர்களுக்கு உண்டாயிருந்த இடுக்கங்களையும் அகற்றி ஆதரித்துவந்தாராம்.

ஏழைகளுக்கு நேர்ந்துள்ள இடுக்கங்களை நீக்கி ரட்சித்த கனவான் அத்தேசத்தைவிட்டு நீங்கிவிடுகின்றாரென்று கேழ்விப்பட்டவுடன் அவ்விடமுள்ள ஏழைக்குடிகள் யாவரும் கண்கலக்கமுற்றதுடன், இனி சாதிபேதம் வகுத்துள்ளக் கலைக்ட்டர் யாவரேனும் இத்தேசத்திற்கு வந்துவிடுவார்களோவென்னும் பெரும் பீதி கொண்டிருப்பதாக வதந்தி. காரணமோவென்னில், தற்காலமிருந்த கலைக்ட்டரவர்கள் தன்னைப்போல் பிறரை நேசிக்க வேண்டுமென்னும் முதுமொழியைத் தாங்கி சகலரையும் பேதமின்றிக் கார்த்து ரட்சித்தக் கருணையஞ் செயலேயாம்.

இத்தகையக் கருணை நிறைந்த மகமதியக் கலைக்கட்டரவர்கள் நீடு வாழ்க்கையும், சுக நிதியமும், குடும்ப சம்பத்தும் மென்மேலும் பெற்று, தற்காலம் தான் செல்லுமிடத்திலுமுள்ள சாதிபேதமற்ற ஏழைக்குடிகளை ரட்சித்து ஈடேற்றுவாரெலா தம்புகிறோம்.

- 4:20; அக்டோபர் 26, 1910 -