அறிவுக்கு உணவு/நாவைக் காப்பாற்று

விக்கிமூலம் இலிருந்து

‘நா’வைக் காப்பாற்று

கோபம் வந்தபோது மட்டுமின்றி, மகிழ்ச்சி வந்தபோதும் மக்கள் அறிவிழந்து பல சொற்களைச் சொல்லி விடுகின்றார்கள். கோபம் வந்தபோது கொட்டுகிற சொற்களைவிட மகிழ்ச்சி வந்தபோது கொட்டுகிற சொற்களினாலேதான் அதிகத் தீமைகள் விளைகின்றன.

‘நாவைக் காப்பாற்றாதவன் வாழ்வை இழந்துவிடுவான்’ என்னும் உண்மையைச் சினம் வந்தபோதும் மகிழ்ச்சி வந்தபோதும் மட்டுமல்லாது, சும்மா இருக்கும்போதும் மறந்துவிடாதே!