இளையர் அறிவியல் களஞ்சியம்/எரிமலை

விக்கிமூலம் இலிருந்து

எரிமலை : நிலவுலகின் மேற்பகுதி கெட்டியாக இருப்பது போன்று அதன் அடிப்பகுதி இல்லை. இருக்கமற்று இருப்பதோடு வெப்பத் தன்மை மிக்கதாகவும் இருக்கிறது. இன்னும் ஆழத்தில் அதன் மையப் பகுதியைச் சுற்றிலும் வெப்பம் மிக்க குழம்புப் பகுதிகளாகவே இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். சுமார் 80 கி.மீ. ஆழத்தில் இத்தகைய கல்லும் மண்ணும் உருகிய கற்குழம்புப் பகுதி அமைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இக்குழம்பில் நீராவியுடன் வேறு சில வாயுக்களும் மூடிக்கொண்டிருக்கும். கடினமான பாறைகளும்கூட அதிக வெப்பத்தால் உருகி விடுவ
அலாஸ்காவிலுள்ள எரியும் எரிமலை

தும் உண்டு. அப்போது உண்டாகும் வாயுக்களின் அழுத்தத்தின் காரணமாக உருகிய

ஆறிய எரிமலை வாய்

பாறைக் குழம்புகள் தரையைப் பிளந்து கொண்டு வெளிப்படும்.

வெடித்து வெளிக்கிளம்பும் பாறைக் குழம்புகள் சுற்றிலும் படிந்து ஆறி மீண்டும் கெட்டியாகிவிடும். கெட்டியான இத்தகைய எரி மலைக் குழம்புகள் மலைபோல் காட்சி தரும். இத்தகைய எரிமலை ஒன்று ஈக்வடார் நாட்டில் உள்ளது. இதன் உயரம் 6,000மீட்டராகும். இதில் எரிமலைக் குழம்பு வெளிப்பட்ட எரிமலை வாய் இருக்கிறது. எரிமலைக் குழம்பு வெளியேறுவது நின்றவுடன் இவ்வாயும் அடைபட்டுவிடும்.

எரிமலைகள் நிலப்பகுதிகளில் மட்டுமல்ல கடற்பகுதிகளிலும் உண்டு. கடலில் வெடித்து எரிமலைக் குழம்புகள் வெளிப்படும்போது பேரலைகள் எழும். இதனால் இக்கடற்கரைகளின் ஓரத்தில் அமைந்துள்ள நகரங்கள் பெரும் பாதிப்புக்காளாவதும் உண்டு.

உலகில் சுமார் ஐந்நூறுக்கு மேற்பட்ட எரி மலைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவற்றுள் இத்தாலியில் உள்ள வெசூவியஸ் எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் உச்சிப்பகுதி இன்றுங்கூட புகைந்துகொண்டிருக்கிறது. இவ் வெரிமலை கி.பி. 79ஆம் ஆண்டில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இத்தாலியின் புகழ்பெற்ற நகரங்களான பாம்ப்பி, ஹெர்க்குலேனியம், ஸ்டேப்பி ஆகியவை அழிந்ததாகக் கூறப்படுகிறது. சிசிலித் தீவிலுள்ள எட்னா எரிமலையும் ஜப்பானில் உள்ள பூஜியாமா எரிமலையும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

உலகில் உள்ள எரிமலைகளில் பெரும் பாலானவை பசிபிக் பெருங்கடற் பகுதியில் அமைந்துள்ளன.

எரிமலைகளில் மூன்று வகைகள் உண்டு. அவையாவன; செயல்படும் எரிமலைகள், தூங்கும் எரிமலைகள், அவிந்த எரிமலைகள் என்பனவாகும். இவற்றில் பெரும்பாலான எரிமலைகள் கடற் பகுதிகளிலோ அல்லது கண்டங்களின் ஓரங்களிலோ அல்லது நீண்ட நீர்பரப்புள்ள ஏரிகளின் அருகிலோ இருக்கும்.