இளையர் அறிவியல் களஞ்சியம்/மின்காந்தம்

விக்கிமூலம் இலிருந்து

மின்காந்தம் : "எலெக்ரோ மாக்னெட்’ என அழைக்கப்படும் மின்காந்தம் தன் காந்த சக்தியை இழந்துவிடும். சாதாரணமாக இரும்புத் துண்டு ஒன்றில் மின் கம்பிகளைச் சுற்றி மின் னோட்டம் செலுத்தும்போது இரும்புத் துண்டு காந்த சக்தியைப் பெறும்.

எஃகு, வார்ப்பிரும்பு, தேனிரும்பு என இரும்புகளில் பலவகை இருந்தபோதிலும் மின்காந்த முண்டாக்கத் தேனிரும்புத் துண்டுகளே பயன்படுத்தப்படுகின்றன. காந்தத்திற்கு இருப்பதுபோலவே மின்காந்தத்திற்கும் வட முனை, தென்முனை என இரு முனைகள் உண்டு. இதைக் காந்த ஊசி கொண்டு அறியலாம். மின்காந்தத்தை எந்த அளவிலும் வடிவிலும் பெற இயலும்.

மின்காந்தத் தத்துவத்தை 1825ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறிந்து கூறியவர்

மின்காந்தம்

வில்லியம் ஸ்ட்டர்ஜன் எனும் ஆங்கிலேயர் ஆவார். அதன்பின் 1820இல் ஆர்ஸ்டெட்

மின் அழைப்பு மணி

எனும் டேனிஸ் அறிஞர் காந்தத்தின் விளைவுகளைக் கண்டறிந்து கூறினார்.

காந்தத்தை உருவாக்க அதிக நேரம் செலவாகும். ஆனால், மின்காந்தத்தை எண்ணிய மாத்திரத்தில் பெற முடியும். மின்காந்தத்தை தேவைக்கேற்ப சிறிய அளவிலோ பெரிய அளவிலோ உற்பத்தி செய்துகொள்ள முடியும். சான்றாக, மின் அழைப்பு மணிக்கு மிகக் குறைந்த அளவு மின் காந்த சக்தி போதும், அதைவிட சற்று அதிக அளவு மின்காந்த சக்தி தந்தி, டெலிபோன் இயங்கத் தேவைப்படும். தொழிற்சாலைகளில் பல டன் நிறையுள்ள பொருட்களைத் தூக்குவதற்கும் இரும்பு. தொழிற்சாலைகளில் இரும்புப் பொருட்களைத் தூக்குவதற்கும் ஆற்றல் மிக்க மின் காந்தங்கள் தேவைப்படும்