ஊசிகள்/பக்கம் 15-24

விக்கிமூலம் இலிருந்து

வேகம்





எங்கள்.ஊர் எம்.எல்.ஏ.
ஏழுமாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்

மின்னல் வேகம்
என்ன வேகம்?

இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்......

என்ன தேசம்?
இந்தத் தேசம்?

தமிழ்ப் பற்று




தேவ பாஷையில்
தேர்ச்சி மிக்க
சாஸ்திரி ஒருவர்
சபையில் சொன்னார்;
“ஜாதி வேண்டும்”
“ஜாதி வேண்டும்:”

உடனே சீறி
ஒருதமிழ் மறவர்
ஓங்கிக்கத்தினார்;
"ஓய் ஓய், இனிநீர்
ஜாதி வேண்டும்
என்றால் பொறுமையாய்
இருக்க முடியாது என்னால்
சரியாய்ச்
சாதி வேண்டும்
என்றே சாற்றும். ”



சுரண்டலாமா?





விழித்துப் பார்த்தேன்
விரலை மெதுவாய்க்
கடித்தொரு பாச்சை
கால்வாங்கியது.

பதைத்துக் கேட்டேன்:
'பாவப் பூச்சியே!
கட்டை விரல் ஏன்
தட்டுப்படாமல்
போனதுன் கண்ணில்?

மெலிந்திருக்கின்ற
சுண்டு விரலைச்
சுரண்டலாமா?

      சுரண்ட லாமா?
      சுரண்ட லாமா?’’



வறுமையே
வெளியேறு



எட்டு மாதமாய்
எங்கள்தலைவர்
தெருவில் நின்று
செழிக்கச் செய்தார்
முழக்கம்....
வறுமை
வெளியேறிற்றா
விரைவாய்...... ?



நேற்று
செட்டியார் வீட்டுத்
திருமணப் பந்தியில்
எதுவும் பேசாது
எங்கள்தலைவர்
எட்டி உதைத்தார்....
வறுமை,
வேக வேகமாய்
வெளியே றிற்று -
பரட்டைத்தலையும்
எலும்பும் தோலும்
கிழிந்த கந்தையுமாக...... !



மேயர் மகன்
தோட்டி மகனுக்குக்
கூறியது



குப்பாகுப்பா!
உன்னைப் பெற்ற தந்தைக்கு
உன்னைத்தானே
அடிக்கத் தெரியும்


என்னைப் பெற்ற தந்தைக்கு
இந்த ஊரையே
அடிக்கத் தெரியும்


இப்போதேனும்
ஒப்புக் கொள்ளேன்
என்றன்தந்தை
தானே பெரியவர்....
வணக்கத்திற்குரியவர்....

காதலோ காதல்





'காதல் என்ன
கத்தரிக் காயா'
என்ற தொடர்கதை
'இரவில்' எழுதிய
வாணி மணாளன்
பகலில்
வாரச்சந்தையில்
கிலோ விலை ரூபாய்
இரண்டெனக் கேட்டதும்
அயர்ந்தார்; கண்களை
அகலத் திறந்தார்,,...

காய்கறிக்காரன்
கடுப்பில் கேட்டான்
'அத்தனை மலிவாய்
அள்ளிக் கொள்ள
கத்தரிக்காய் என்ன
காதலா...?'



பழக்கம் பொல்லாதது


ஆராவமுதன்
அமைச்சர்பதவியை
இழந்து வருந்தி
இருந்த ஒர் இரவில்
அருகில்துங்கிய
ஆசைமனைவியைச்
சும்மா சும்மா
சுரண்டலானார்:
அம்மாகேட்டார் ஆத்திரத்தில்:

”ஏன்தான் உங்களுக்கு
இன்னும் அந்தப்
பொல்லாப்பழக்கம்
போகவில்லையோ?”

வயிற்றுப் பா(ட்)டு



என்னை யாரோ
என்று நினைத்துப்
புலவன் ஒருவன்
புகழத் தொடங்கினான்:

'நீண்ட கண்கள்
கூரிய நாசி
அகன்ற நெற்றி
அழகிய பற்கள்
வயிரத்தோள்கள்
மலைபோல் மார்பு,

தொடரவிடாமல்
இடையில் பாய்ந்தேன்:

'ஒகோஉனக்கு
ஒட்டிய வயிறு
போலும்...'



ப(பா)ட்டி மன்றம்




பாட்டி செத்த பத்தாம்வினாடி
பெரிய குழப்பம் -
பினத்தை எரிப்பதா புதைப்பதா என்று

உள்ளூர்ப் புலவர் ஒடி வந்தார்
பட்டி மன்றம் வைத்துப்
பார்த்தால் என்ன என்று



ஆனை மாதிரி





அப்புசாமியின்
அப்பா
ஆனைமாதிரி!

இருந்த போது
எம்.பி. பதவி...
இறந்த போது
சிவலோக பதவி...

அப்பு சாமியின்
அப்பா
ஆனைமாதிரி!

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊசிகள்/பக்கம்_15-24&oldid=1453800" இலிருந்து மீள்விக்கப்பட்டது