எனது நாடக வாழ்க்கை/முத்தமிழ்க்கலா வித்துவ ரத்தினம்

விக்கிமூலம் இலிருந்து
முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம்


சிவலீலா தொடர்ந்து நடைபெற்றது. 100வது நாள் விழாவுக்கு குமாராஜா எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமை தாங்கிப் பாராட்டினார். “என் தந்தையார் தமிழிசை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே டி. கே. எஸ். சகோதரர்கள் இந் நாடகத்தில் தமிழ் இசையை நல்ல முறையில் பரப்பிப் பிரச்சாரம் செய்து வருவது குறித்துப் பாராட்டுகிறேன்.” என்று கூறினார். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் பெருமக்கள் அனைவரும் வந்து நாடகத்தைப் பார்த்தார்கள். தமிழ் சங்கத் துணைத் தலைவர் சீனிவாச ஐயங்காரும் தலைமைப் பேராசிரியர் திரு நாராயண ஐயங்கார் சுவாமிகளும் நாவலர் சோமசுந்தர பாரதியார் ஜெகவீர பாண்டியனார், கார்மேகக் கோனார் முதலிய பெரும் புலவர்களும் 108ஆவது நாள் வருகை புரிந்து எங்களைப்பாராட்டி முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம் என்னும் பட்டத்தையும், சங்கத் தலைவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னார் கையெழுத்திட்ட பெரிய பத்திரத் தையும் அளித்தனார்.

அன்று அந்த மாபெரும் புலவர் பெருமக்கள் மேடைமீது நின்று வாழ்த்திப் பாடிய பாடல்களிலும் மனமுவந்து வாழ்த்திய உரை மணிகளிலும் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாச்சாலை ஆசிரியர்
சு. நல்ல சிவன்பிள்ளை அவர்கள்

பரதவன்றன்வடிவாகி வலேகைக் கொண்டு
பகர றிய மீன்படுத்தும் பரிவிற் செய்த
புரதகனன் விளையாட்டும், அவன்றன் கூத்தும்,
புவனமெல்லாம் ஈன்ற சக்தி புரியும் கூத்தும்,


விரதமுனி வரர் விபுதர் உரக ரேனோர்
விழைந்துதவம் புரிந்திடினும் மேவு றாத
சரதமுறு சிவலீலை புரியூரீ பால
சண்முகா னந்தசபை தனிற்கண் டோமே!

சிவபத்தி அடியர்பத்தி சிறந்த கச்சித்
திருகுறிப்புத் தொண்டர் பத்தித் திறனைக் கண்டு
நவபத்தி யுலகிலுளோ ரடையும் வண்ணம்
நடித்தாகா டகத்திறனை காமென் சொல்கேம்!
பவசத்தி தனையகற்றும் நெறிகைக் கொண்ட
பண்புறுகா டகசபையின் பால சீலர்
தவசத்தியுறுதலைவர் தூய பால
சண்முகா னந்தசபை தழைத்து வாழி!

நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் எம். ஏ., பி. எல்.

“ஸ்ரீபால சண்முகானந்த சபையார் நடத்தும் சிவலீலா என்னும் நாடகத்தைப் பல நண்பர் பார்த்து வந்து புகழ்ந்ததைக் கேட்டு 26.10.41 இல் நானும், என் குடும்பத்தாரும் போய். பார்த்தோம். நன்றாயிருந்தது என்று சொல்லுவது நான் அனுப வித்த உணர்ச்சியை விளக்கப் போதாது. தற்காலம் நடிக்கப்படும் தமிழ் நாடகங்கள் குலப் பெண்களோடு கண்டுகளிக்கக்கூடாத தாயும்,கல்லாத மாந்தர்க்கன்றி நல்லோர் உவக்கக்கூடாததாயும் இருந்து வருவதால் சுமார் 40 ஆண்டுகளாக நான் ஒரு தமிழ் நாடகத்தையும் பார்க்காமல் வெறுத்திருந்தேன். சிவலீலாவைக் கண்ட பிறகுதமிழரும் நல்ல முறையில் அறிவுடையார் மகிழ, கண்டார் மனதில் அறநிலைகள் உறைக்க, இன்பமும் உணர்வும். ஒன்றி உவக்க, நடிகர்கள் தமிழில் நாடகம் நடத்தக்கூடுமென்று நம்பலானேன்.

அவரவர் நிலையில், அவரவர் நடிப்புச் சிறந்திருந்தது. இவ் வாறு சமயக் கதைகளை வழுவற நடித்துச் சான்றாேர் மகிழச் செய்வதால் சமயத்தில் அன்பும் மதிப்பும் வளர்வதாகும். காத லின்பமும் தூய முறையில் காட்டப்பெற்றது. காட்சிகளெல்லாம் இயற்கையின் மாட்சி தோன்ற இனிது சமைக்கப்பட்டிருந்தது. அசாதாரண கடவுட் செயல்களை நிகழ்வனபோல் நேரிற் காட்டி, பார்ப்பவரெல்லாம் பரவசப்படுமாறு அமைத்திருந்த அழகு வியக் கத் தக்கது. இசையொடு நிறைந்த இன்சுவைப் பாட்டுகள் ஒவ்வொரு நடரும்பாடிய சிறப்பு உணர்வைக்கொண்டது. ஐம்பொறி களையும், அறிவையும் ஈர்த்து ஒப்பக் களிக்கச் செய்த இந்நாடகத்தை எல்லோரும் வியந்து புகழ்வது இயற்கையாகும். இத்தகைய நல்ல கதைகளே நாடகமாக்கி நடித்துத் தமிழரை அறிவும் ஒழுக்கமும் இன்ப முறையில் எளிதில் உணர்த்தி இச் சபையார் புகழொடு செல்வம் பெருக அருளுமாறு இறைவனை இறைஞ்சுகின்றேன்; சபையோருக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்து கின்றேன்.

மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழாசிரியர்
ஆ. கார்மேகக்கோனார் அவர்கள்

”... ... ... .... .... ... ... ... ... ...
ஆலவாய் அவிர்சடைப் பெருமான் அன்று
சாலவே மன்பதை தாமுய்ங் திடற்கு
அருளொடு புரிந்த திருவிளையாடலுள்
ஒரு சில வற்றை உருவுடன் தொகுத்து
இந்த காள்தனில் இங்ககர் வாழும்
மக்கள் யாவரும் மகிழ்ந்துகண் டின்புற
ஆடலும் பாடலும் அபிநய வகைகளும்
பீடுறும் எழினியின் பிறங்கொளி கலங்களும்
சாலவே அமையப் பால சண்முகா
ந்த சபையார் நலமுடன் புரிந்து
நூற்றெட்டு நாட்களும் நுவவருஞ் சிறப்பொடு
நாற்றிசை போற்ற கடித்திட்ட காட்சியை
என்னென் றியம்புவேன்! இந்நக ரெல்லாம்
எண்ணாம் எண்ணமும் இயம்பும் சொல்லும்
சிவலீ லையே! சிவலீ லையே!"

திருவனந்தபுரம் இசைச் செல்வர்
திரு தி. இலட்சுமணபிள்ளை அவர்கள்

டி. கே. எஸ். 8 சகோதரர்கள் மதுரையில் நடத்தி வருகிற நாடகங்களில் சிவலிலே என்னும் திருவிளையாடற் புராணக்கதை

நடித்ததை நான் கண்ணாற்று மிக மகிழ்ந்தேன். நடிப்பு முறை களில் எல்லா அம்சங்களும் போற்றத் தக்கனவாக இருந்தன. இவ்வாறு வேறுஅநேக கதைகளையும் இவர்கள் நடித்து மகாஜனங் களே ஆனந்திப்பித்து வருவதாக அறிகிறேன். நாடகப் பாத்திரங் களாயுள்ளவர்கள் இனிய செந்தமிழ் நடையிலும் யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் விதத்திலும் பேச்சு நடத்துவதைக் கேட்டு உவகை கொண்டேன். காட்சிப் படங்கள் மனதைக் கவர்ந்து கொள்ளும் சிறப்புடையன. சாகித்யமும் சங்கீத மெட்டுக்களும் மெச்சத்தக்கன. நாடகம் நடத்துகிற ஒழுங்கும் நடவடிக்கைகளும் டி. கே. எஸ். சகோதரர்களினுடையநுண்ணறி வையும் நல்லொழுக்கத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குவன. அவர்களுடைய இந்த வியக்கத் தக்க முயற்சி இன்னும் மேம்பாடுற்று இனிய தமிழ் வளர்ச்சியையும் தமிழ் இன்னிசை வளர்ச்சியையும் உண்டாக்கித் தழுலகிற்குப் பேருதவி யளிக்குமென்று நான் உறுதியாய் நம்புகிறேன்.

மதுரை தமிழ் வித்வான் திரு. நா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள்

சிவபெருமான் கூடலின்கண் செய்ததிரு
விளையாடல் செப்புங்காலை
எவரறிவார் பரஞ்சோதி எழுதிவைத்த
ஏட்டிலிவை இருப்பதன்றி?
பவம்விலகிப் புனிதமுற மதுரையூரஸ்ரீ
பாலசண்மு கானந்தப்பேர்
சவைகடித்துக் காட்டினதால் சங்கீத
வமுதினையும் சார்ந்துண்டோமே!

வல்லானென் றிசைப்போர்க்கு வந்தவனை
யோடவிட்ட மகிமை கண்டோம்
கல்லானை உண்பதற்குக் கரும்பளித்த
பெருங்காட்சி கண்டோம் ஆங்கே
இல்லாரை உண்டாக்கி இருக்தாரைக்
கணமறைத்த இயல்பு கண்டோம்
எல்லாஞ்செய் திடற்குரிய ஈஸ்வரனார்
விளையாடல் என்னே! என்னே!!

பேர்சிறக்த டி. கே. எஸ். பிரதரிவர்
நடிப்புமுறை பேணுங்கீதம்
சீர் சிறந்த செந்தமிழ்ப் செவிக்கினிய
வசனநடை தேகுே பாலோ!
ஓர் சிறந்த தெள்ளமுதோ உண்ண உண்ணத்
திகட்டாமல் உளமுற்றுாறும்
பார் சிறந்த முப்பழத்தின் பாகமுதோ
அத்தனையும் பகரலாமே!

தனிமதுரை ஸ்ரீபால சண்முகா
னந்தசபை தரணிமீது
கனிமதுர கவரசநற் கண்காட்சி
சங்கீதம் கலந்து தோன்ற
மனிதர்குலம் மகிழ்வடைய மாபெரிய
சரிதமெலாம் வகுத்துமேலாய்
இனி திருந்து நடத்திடுக! இருகிலமிங்
கிருக்கும்வரை இசைந்துமாதோ !

மதுரை கே. இலட்சுமி பாரதி. எம். எல். ஏ.

இச்சபையார் நடத்தி வருகிற சிவலீலா நாடகத்தை மும் முறை பார்த்தேன். இன்னும் எத்தனைமுறை பார்த்தால் திருப்தியடைவேன் என்று சொல்வதற்கில்லை. தெவிட்டாத தெய்வ அமிர்தம் என்றே சுருங்கக் கூறுவேன். தமிழை அழ்மிதுக்கு ஒப்பிட்டது இதனால்தான் போலும்! தெய்வ பக்தியின் மேன்மைகளைப் பரப்புவது இந்த நாடகம், தமிழ்மொழியைத் தழைத்து ஓங்கச் செய்வது இந்த நாடகம் பார்க்குந் தோறும் உள்ளத்தை உயர்த்துகிறது. கண்ணைக்கவரும் காட்சிகள்; உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் பேச்சு! செவிக்கினிய பாட்டு!! மனதை இழுக்கும் சிவ பெருமான் திருநடனம். பார்த்து அனுபவிக்க வேண்டிய இந்த நாடகத்தை எழுத்தில் புகழ்வது எங்ஙனம் இயலும்? மக்களுக்குப் பயன்படும் இத்தகைய நாடகங்களை நடத்திப் பேரும் புகழோடும் சீரும் சிறப்போடும் இச்சபையார் வாழ்ந்து ஓங்கி வளம்பெற வளரவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கவிராஜ பண்டித ஜெகவீர பாண்டினார் அவர்கள்


உலகுயிர் உய்ய ஒளிர்சிவம் நடித்த
உயர்சிவ லீலையை இன்றித்
தலமுயர் பால சண்முகா னந்த
சபையினார் சதுருடன் நடிக்கும்
நிலையெதிர் கண்டார் நிறைநலம் கண்டார்
நித்தலும் சிவனருள் நினைந்து
நலமுயர் பக்தி நிலைமிகப் பெற்று
நானிலம் இன்புற வாழ்வார்!


ஸ்ரீ மதுர பாஸ்கரதாஸ் அவர்கள்


தீர்க்கமுடன் நூற்றெட்டுத் தினங்களிதே சிவலிலைத்
திருவி ழாவைப்
பார்க்கவரும் பேர்களித்தோ ராயிரத்தெட் டரன்பதியைப்
பணிந்த பாக்யம்
ஊக்கமுறக் கிடைத்ததென்றே கூறுகின்றார் நந்நெறியி
லுயர்ந்தோ ரெல்லாம்
ஆக்கமிகும் ஸ்ரீபால சண்முகா னந்தசபைக்
கரும்பே றீதே!

இயலிசைக்குப் பிறகுவைத்த நாடகத்தை முதன்மைபெற
எடுத்துக் காட்டிச்
செயலிசைக்கும் நவரஸங்க ளுடன் பலமெய்க் காட்சிகளும்
சிறப்பாய்த் தோன்றக்
கயலிசைக்கண் ணம்பிகையாள் மதுரைநகர்ச் சனசமுகம்
களிப்பே கூர
மயலிசைக்கும் ஸ்ரீபால சன்முகா னந்தசபா
வாழ்க மன்னே!
சங்கரன் முத்துசாமி சண்முகனும் பகவதியாம்
சகோத ரர்தாம்
பொங்கரவம் புனைந்தபிரான் திருவருளாற் பலாகலமும்
பொருந்தி வாழ்க!

இங்கிதமும் குணநெறியும் தவருத சதுரரிவர்
இனிதாய் வாழ்க!
மங்களமும் நிறைமதியும் நவகிதியும் ஓங்கியென்றும்
வாழ்க மாதோ!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜனாப் உபயதுல்லா அவர்கள்

இவர்கள் தேர்ச்சியாக நடத்தி வரும் சிவலீலா நாடகத்தை இரண்டு முறை பார்த்தேன். மிகவும் நேர்த்தியாகவும், நடி கர்கள் திறமையாகவும் வாக்குச் சுத்தத்தோடும் இசைவன்மை யோடும் நடிப்பின் பாவத்தோடும் நன்முக நடிக்குந் தன்மை, மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. சரித்தித்தின் தன்மை, போக்குக்கு ஏற்றார்போல் காட்சிக்கு அழகான படுதாக்கள். வர்ணத்தட்டிகள் மிக மிக அமைப்பாக இருந்தது. மணிக்கணக் காகப் பார்ப்பதில் சலிப்புத் தட்டவில்லை. இப்பொழுது நவீன முறையில் பல சினிமாப் படங்கள் மதுரை நகரில் நடந்து வரும் போதும் ஒரே கதையை நூறுதினங்கள் நடத்திய பிறகும் ஜனங் களின் உற்சாகம் குன்றாது கூட்டம் கூட்டமாகப் பார்த்து வருவது ஒன்றே, இக்கம்பெனியின் திறமையை மெய்பிக்கிறது.

குமரகவி திரு. மு. நாராயணசாமி பிள்ளை

நவரசங்கள் மேவுமுயர் நாடகப்பண் பால்முன் த
வமுனிவர்க் கேற்றவரம் தந்தோன்-சிவபெருமான்
செய்தவிளை யாட்டெல்லாம் தெள்ளதென் றேயளிக்கும்
மெய்ச் சிவலி லாபொன்னா மே.

திரு. பி. பாஸ்கரய்யர்

தண்டமிழார் கூடலிறை தந்தவிளை யாடலொடு
தொண்டர்புரா னத்திலொரு தொண்டர்கதை -கொண்ட
சிவலீலா நாடகத்தின், சீர்த்திதனைப் பாரார்
பவல்லா நீங்காரென் பேம்.

செட்டிநாடு குமாரராஜா சா.மு. அ. முத்தையா செட்டியார் அவர்கள்

ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையாரால் நடத்தப்பெற்ற சிவல்லா என்னும் புண்ணிய திவ்ய சரித்திரத்தை அதன் நூறாவது தினத்தன்று கண்டு களிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததைப் பற்றி மட்டற்ற மகிழ்சியடைந்தேன். இந்நகரிலே இந் நாடகம் இடைவிடாது நூறு தினங்களுக்கு மேல் நடை பெற்றதே இந்நாடகத்தின் சிறப்பைப் பன்மடங்கு உயர்த்துகின்றது.

இதில் நடிக்கின்ற எல்லா நடிகர்களும் மிகவும் திறமையுடன் அவரவர்கள் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்தது இனிது பாராட்டத்தக்கது. மேலும் இவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எளிதில் சகல மக்களும் உணருமாறு இனிமையாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களில் முன் நடைபெற்ற சிவபெருமானின் லீலைகளை இன்னும் மக்கள் பக்திரசத்துடன் கண்டு களித்து ஆனந்தத்துடன் அனுபவிக்கவும், இச்சபையினார் தங்கள் நாடகங்கள் மூலமாய் தமிழ் இசைக்கும், தமிழ்க்கலை வளர்ச்சிக்கும் செய்யுந் தொண்டு மிக மிக போற்றற்பாலது.

Mr J M Dogk, Managing Dircetor, The Madura Mills Co. Ltd, Madura.

Mrs. Doak and I are greatful to Messrs T. K. S. & Bros. for giving us an opportunity to attend the Centenary Celebration of the Drama ‘Sive Leela’ Yesterday.

it was an amazing exparence, for Surpassing any othar Tamil Drama we have everseen. The stagecraft, settings, Costumes & above all the spirited acting breathed the spirit of Madura. Madura is fortunate in having such talent & trust Messrs T. K. S. & Bros. will go on here from Success to Success

இத்தகைய பெருமைக்குரிய வாழ்த்துக்களை யெல்லாம் நாங்கள் பெருவதற்கு எங்கள் அருமைச் சகோதரர் திரு. சுந்தர சர்மா அவர்கள் முன்னின்று பாடுபட்டார் என்பதை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன். அன்றிரவே மீனட்சியம்மன் ஆலயத்திற்கு எங்கள் நால்வரையும் மேள தாளத்தோடு வரவேற்று, பத்வட்டம் கட்டிச் சிறப்புகளைச் செய்தனார். இப்பெரு முயற்சியில் ஆலய நிர்வாக அதிகாரி ஆர். எஸ். நாயுடுவும், அதிகார பாரபரிதியம் சுந்தர சர்மாவும் முன்னின்று உழைத்தனார். ஒரு நாடகம். ஒரே நாடக அரங்கில் தொடர்ந்து 108 நாட்கள் நடைபெற்றது இதுவே முதல் தடவையென்று எல்லோரும் பாராட்டினார்கள். சிவலீலா நாடகம் தொடங்கிய அன்று திரைப்பட முறையைப்

பின்பற்றி நாடகத்திற்குப் பாட்டுப் புத்தகங்கள் வெளியிட்டோம். கடைசி நாளன்று சிவலீலா நாடக நூலும் வெளியிடப் பெற்றது.

சிவலீலா வெற்றிக் களிப்பில் சின்னண்ணா ராஜாபர்த்ருஹரி நாடகத்தை எழுதித் தயாரித்தார். பர்த்ருஹரிக்காகவும் பல புதிய காட்சிகள் தயாரிக்கப்பெற்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ராணி அந்தப்புரம், நந்தவன மாடி, குதிரை லாயம் முதலியனவாகும். 1941 டிசம்பர் 7 ஆம் தேதி நாடகம் அரங்கேறியது. பகவதி பர்த்ருஹரியாகவும், கலைஞர் நாகராஜன் இராணி மோகனவாகவும், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி விக்ரமனுகவும், எம். எஸ். திரெளபதி சரசாவாகவும், நான் குதிரைக்காரனாகவும், சிவதாணு என்கையாளாகவும் நடித்தோம். இந்நாடகத்தில் என் மனதிற்கு பொறுத்தமான வேடம் கிடைத்தது. நடிப்புத் திறமையை நன்கு வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க நாடகம் இது. நான் என் துணைவியோடு தனியே வாழ்ந்த இன்ப நாட்களல்லவா? அவள் இந் நாடகத்தைத் தொடர்ந்து பலமுறை வந்து பார்த்தாள். கலைஞர். ஏ. பி. நாகராஜனுடன் நான் நடிக்கும் காதல் காட்சிகளைக் கண்டு என்னோடு ஊடினாள். உண்மையில் நாகராஜன் அவள் கண்களுக்குப் பெண்ணாகவே காட்சி அளித்தார். பெண்களுக்குரிய நடை, நளினம், குழைவு, நெளிவு, குரல், கொடிபோன்ற உடல் அனைத்தும் நாகராஜனிடம் அந்த நாளில் பூரணமாக அமைந்திருந்தன. ராஜா பர்த்ரு ஹரியோடு மோகன செய்யும் சாகசமும், தன் உள்ளம் கவர்ந்த அஸ்வபாலைேடு அவளுக்கிருந்த அளவற்ற ஆசாபாசமும், கள்ளத்தனத்தைக் கண்டு பிடித்துக் கண்டித்த விக்ரமன் மீது அவளுக்கு ஏற்படும் வெறியும், இறுதியில் கணவனை எதிர்த்து நின்று எழுச்சியோடு பேசும் பேய்க் குணமும் கலைஞர். ஏ.பி. நாகராஜனின் திறமையான நடிப்பில் நன்கு வெளிப்பட்டன. ராஜா பர்த்ருஹரி தொடர்ந்து இருபத்தி ஐந்து நாட்கள் நல்ல வசூலுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.