கனிச்சாறு 1/068-089

விக்கிமூலம் இலிருந்து

64  வெம்புலியே வாளெடு !

நம்மை, நம் நாட்டை
நலம் பல பேணி
நாளும் காப்பது மொழி!
நல்லன காட்டித் தீயன களைய
உதவும்; நமக்கது விழி!

செம்மைத் தமிழ் மொழி
சீர்குலை வதனால்
செந்தமிழ் நாடுறும் பழி!
சிற்றறி வுடையோர் இந்தியைப் புகுத்தச்
சீறுவர்; நீயதை ஒழி!

வெம்மைக் கொடும் போர்
விளையினும், மொழிக்கென
வெற்புத் தோளினைக் கொடு!
வீணரை வீழ்த்து! வெற்றியை வாழ்த்து!
வெம்புலியே வாளெடு!

இம்மை மறுமை யென்
றேபல பிதற்றி
இழிவார் பலர்; அதை விடு!
இழப்பது வாழ்வே என்னினும் அவர்மொழி
ஏற்பது தீது! உயிர் விடு!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/068-089&oldid=1515058" இலிருந்து மீள்விக்கப்பட்டது