கனிச்சாறு 1/071-089

விக்கிமூலம் இலிருந்து

67  வெள்ளம் வருமுன் அணை!

மொழிப்பற்று, தீதென்றால் இந்திக்கு
முதன்மைதரல் தீதா காதா?
பழிப்புற்ற அம்மொழியைச் செந்தமிழ்ப்பால்
பருகுகின்ற சிறுவர்க் கூட்டிச்
செழிப்புற்ற நல்லுணர்வைக் கெடுப்பதுதான்
சிறப்பான அறமோ சொல்வீர்!
விழிப்புற்றுத் தமிழரெலாம் எழல்வேண்டும்;
வெள்ளம் முன் அணைபோ டற்கே!

 
-1963

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/071-089&oldid=1515061" இலிருந்து மீள்விக்கப்பட்டது