கனிச்சாறு 1/075-089

விக்கிமூலம் இலிருந்து

71  நாடற்றுப் போவாய்....!

பீடற்ற இந்திப் பிணிப்பைப் பெயர்த்து, இப்
பெருநிலத்துள்,
ஈடற்ற செந்தமிழ்த் தாயை அரியணை
ஏற்றிலையேல்,
ஏடற்று முன்செய் எழுத்தற் றிருக்க
இடமுமற்று,
நாடற்றுப் போவாய் தமிழா, இனுஞ்சில
நாட்களிலே!

-1963

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/075-089&oldid=1515065" இலிருந்து மீள்விக்கப்பட்டது