கனிச்சாறு 1/076-089

விக்கிமூலம் இலிருந்து

72  மாளல் நன்று!

வில்லெடுத்துப் போரிட்ட விறலெங்கே?
வெற்றிபெறும் மணிமார் பெங்கே?
கொல்லவரும் வெம்புலிமேற் குறிதவறா
தெய்கின்ற கூர்வேல் எங்கே?
சொல்லெடுத்துப் பேசிடவும் அஞ்சுகின்றாய்!
சோற்றுக்கு மானம் விற்றாய்!
மல்லெடுத்த இந்திக்கு மருள்கின்றாய்!
தமிழா, நீ மாளல் நன்றே!

-1964

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/076-089&oldid=1515066" இலிருந்து மீள்விக்கப்பட்டது