கலைக்களஞ்சியம்/அமராவதி

விக்கிமூலம் இலிருந்து

அமராவதி குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையிலுள்ளது. இது சாதவாகன அரசர்களின் கீழைத் தலைநகரமாயிருந்தது. சலவைக் கல்லால் செய்த மிகவும் முக்கியமான ஒரு பௌத்த ஸ்தூபம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இங்கே இருந்து வந்தது. இங்குக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை பல சிற்பங்கள் பொறிக்கப்பட்டு வந்துள்ளன. அந்த ஸ்தூபம் புத்தருடைய நினைவுப் பொருள்கன் மீது நிறுவப்பட்டிருந்தது. இந்தியவிலே இவ்வூருக்குத் தொலைவிலுள்ளவர்களும் இங்கு வந்து, பணம் செலவு செய்து,

ஸ்தூபத்தின் சிற்பம்-அமராவதி

உதவி: அரசாங்கப் பொருட்காட்சிச் சாலை, சென்னை

சிற்பங்களைச் செய்வித்திருக்கின்றார்கள். இந்த ஸ்தூபத்தைச் சுற்றியுள்ள அனியானது நாகார்ச்சுனரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடையில் கட்டப்பட்டதாகும். அமராவதிச் சிற்பங்கள் இந்தியாவில் காணப்பெறும் சிறந்த சிற்பங்களைச் சேர்ந்தவை. அவை புத்தருடைய வாழ்க்கையையும் பௌத்த ஜாதகக் கதைகளையும் சித்திரிக்கின்றன. இந்தச் சிற்பங்கள் மிகுதியாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் சென்னைப் பொருட்காட்சிச் சாலையும், பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையுமேயாம். அமராவதியிலுள்ள அமரேசுவரருடைய கோயில் பௌத்தச் சிதைவுகளின் மீது கட்டப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. கல்வெட்டியற் (Epigraphical) சான்றுகள் 12 ஆம் நூற்றாண்டு வரையிலுங் கூட இந்தப் பௌத்த ஸ்தூபத்தில் வழிபாடு நடந்ததாகக் காட்டுகின்றன. அமராவதி ஆந்திரர்களுடைய ஐந்து ஆராமங்களுள் ஒன்றாகவும், பெரிய சிவஸ்தலமாகவும் இருந்து வருகிறது. சீ. கி.

அமராவதி கோவை மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வட்டங்களின் வழியாகச் சென்று, கரூரினருகே காவிரியில் சேரும் ஆறு.

அமராவதி தேவேந்திரனுடைய தலைநகர்; பூவுலகத்தில் புண்ணியம் செய்தோர் அடையும் உலகு என்று புராணங்கள் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அமராவதி&oldid=1453880" இலிருந்து மீள்விக்கப்பட்டது