கலைக்களஞ்சியம்/அருணாசலக் கவிராயர், மு. ரா.

விக்கிமூலம் இலிருந்து

அருணாசலக் கவிராயர், மு. ரா. சேற்றூர் இராமசாமிக் கவிராயர் மக்களில் ஒருவர். சிவகாசித் திருப்பதிப் பெருமான் மீது பல சிறு காப்பியங்கள் செய்துள்ளார். சிவகாசிப் புராணமும் இயற்றியிருக்கின்றார். மேலும் பல அந்தாதிகளும் பிள்ளைத்

மு. ரா. அருணாசலக் கவிராயர்

தமிழ்களும் பதிகங்களும் இயற்றி யிருக்கிறார். குறுக்குத்துறைச் சிலேடைவெண் பாவும் - இவர் பாடியதே. ஆறுமுக நாவலர் வரலாற்றையும் செய்யுளில் எழுதியுள்ளார். பல உரைநடை நூல்களும் உரைகளும் செய்திருக்கிறார். திருக்குறளைத் தெளிவான உரைநடையில் எழுதியிருக்கிறார். அதற்கு ஓர் உரையும் இயற்றியிருக்கிறார். சுப்பிரமணியக் கவிராயரும் கந்தசாமிக் கவிராயரும் இவர்க்கு உடன் பிறந்தவர்கள். 19ஆம் நூற் றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் இருந்தவர்.