கலைக்களஞ்சியம்/அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான்

விக்கிமூலம் இலிருந்து

அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர். திரிபதார்த்த தீபம் என்னும் நூலை இயற்றியவர். இவரால் சுவர்க்கபுர மடம் ஏற்படுத்தப்பட்டது என்பர். பதினேழாம் நூற்றாண்டினர்.