உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அஷ்டக்கிராமம்

விக்கிமூலம் இலிருந்து

அஷ்டக்கிராமம்: மைசூரை யாண்டுவந்த ஜைன சமயத்தினனான பிஜ்ஜளன் என்னும் ஹொய்சள அரசனை இராமானுசர் வைணவனாக்கினார். அவன் அப்போது விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயர் பூண்டான். அந்தச் சமயத்தில் அவன் ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கருகே காவிரியின் இருகரையிலும் உள்ள எட்டுக் கிராமங்களை அவருக்குப் பரிசாக அளித்தான். இவை அஷ்டக்கிராமம் என வழங்கின. 1863-ல் இவை மைசூர், ஹாசன் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டன. இங்குச் சர்க்கரை உற்பத்தித் தொழில் பிரசித்தமானது. இங்கிருந்து வரும் சர்க்கரை 'அஷ்டக்கிராமம்' என்றே பெயர் பெறும்.