கலைக்களஞ்சியம்/இடும்பன்

விக்கிமூலம் இலிருந்து

இடும்பன் (1) அரக்கு மாளிகையினின்று உயிர் பிழைத்த வீமனுடன் போர் செய்து மாண்ட அரக்கன். இடும்பனின் உடன்பிறந்தாளாகிய இடும்பி வீமனை விரும்ப, வீமன் தாய்சொற்படி அவளை மணந்துகடோற்கசனைப் பெற்றான். இடும்பிக்குக் கமலக்கண்ணிஎன்ற பெயருமுண்டு.

(2) அசுரர்க்கு ஆயுதவித்தை கற்பித்தவன். குமாரக் கடவுளுடன் போரிட்டு மூர்ச்சிக்க, இடும்பி அழ, குமாரக்கடவுள் உயிர்ப்பித்துத் தமது கணத்தலைவனாக்கினார்.

(3) கரடிகள் தலைவன், இராமன் துணைவன்.

(4) விநாயகர் பெருமூச்சால் இறந்தவன்.